சமுதாயமே ஒன்றுபடு... முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் பாசிச பயங்கரவாத கும்பல்களை அடியாளம்காட்டி முஸ்லிம்கலிடையே உள்ள பிரிவினையை களைந்து சகோதாரர்களை ஒருங்கிணைப்பதே இத்தளத்தின் முக்கிய நோக்கம் இன்சாஅல்லாஹ்.. /
மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிந்தவனாவான். மேலும் அல்லாஹ் (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன். மேலும், அல்லாஹ் உதவியாளனாக இருக்கப் போதுமானவன்.
(அத்தியாயம் : அந்நிஸா - பெண்கள், வசனம்: 45)

Tuesday, January 27, 2009

மகாராஷ்ட்ரா; இது இந்தியாவின் மாநிலமா? இந்துத்துவாவின் மாநிலமா?


இந்துத்துவாவாதிகளுக்கு கொள்கை என்ற ஒன்று எப்போதுமே இருந்ததில்லை. தேசியம் என்பார்கள் அந்த தேசியத்தின் ஒரு அங்கமான முஸ்லிம்களை கருவருப்பார்கள். தீவிரவாதத்தை ஒழிப்போம் என்பார்கள் ஆனால் மாலேகான் போன்று குண்டுவைத்து அவர்களே தீவிரவாதிகளாகவும் காட்சிதருவார்கள். ராமராஜ்ஜியம் என்பார்கள் தேர்தல் முடிந்தவுடன் ராமரை, அடுத்த தேர்தல்வரை வனவாசம் அனுப்பிவிடுவார்கள். இந்துக்கள் எந்தப்பிரிவாக இருந்தாலும் அவர்களை பாதுகாப்போம் என்பார்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்துக்க்களாக இருந்தால்கூட அவர்களையும் தாக்குவார்கள். சுருங்கசொன்னால் இந்துத்துவா என்றாலே சுயநலம் என்பதே உண்மை.இதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது அவர்கள்செய்யும் நடவடிக்கைமூலம் உலகுக்கு உணர்த்திவிடுவார்கள்.

சில மாதங்களுக்குமுன் மும்பையில் ரயில்வேத்துறை வேலைவாய்ப்பிற்கான நேர்முகத்தேர்வுக்கு வந்த வட இந்தியர்களையும், மும்பையில் வசித்துவந்த வடஇந்தியர்களையும் மும்பையில் தனிராச்சியம் நடத்திக்கொண்டிருக்கும் ராஜ்தாக்கரேயின் ஆட்கள் அடித்து துவைத்து காயப்போட, விஷயம் பெரியஅளவில் எதிரொலித்தவுடன் ராஜ்தாக்கரே கைதுசெய்யப்பட்டார்.பின்பு, வட இந்தியர்களுக்கு எதிராகப்பேசக்கூடாது என்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கொஞ்சகாலம் அடக்கி வாசித்த ராஜ்தாக்கரே, இருதினங்களுக்குமுன் ஒரு பொதுக்கூட்டத்தில் வட இந்தியர்களை தாக்கிப்பேச, அதையே உத்தரவாக எடுத்துக்கொண்ட அவரின் நவநிர்மான் கட்சியினர், நேற்று நாசிக்கில் ஒரு பள்ளிக்கூடத்தில் குடியரசுதினம் கொண்டாடிக்கொண்டிருந்த வட இந்தியர்களை தாக்கியதில் ஏராளமானோர் படுகாயமடைந்ததாக செய்திகள் கூறுகின்றன. மேலும்,இது காவல்துறையின் கண்முன்னேநடந்த வன்முறை என்றும் கூறப்படுகிறது.

மேலும், கடந்த 23.அன்று மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒற்றை தனது ஆதரவாளர்களுடன் சென்று தாக்கிய வழக்கில் சிவசேனா எம்.பி.ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது, சட்டம் பால்தாக்கரே,ராஜ்தாக்கரே கும்பலுக்கு வளைகிறதோ என்ற எண்ணமும், மகாராஷ்டிர மாநிலம் இந்தியாவில் உள்ளதா? என்ற சந்தேகமும் நடுநிலையாளர்களுக்கு ஏற்படுவதில் வியப்பில்லை.

thanks 2 :நிழல்களும் நிஜங்களும்

Wednesday, January 14, 2009

'நரமாமிசபட்சினி' நரேந்திரமோடிக்கு உச்சநீதிமன்றம் குட்டு


அன்பர்களே,
மறக்கமுடியுமா?

மோடியின் ஆசீர்வாதத்தோடும்,ஆசியோடும் நடைபெற்ற முஸ்லீம் இனபடுகொலையை!
மாபாவிகள் எம் சகோதரிகளின் மானத்தை பறித்த அந்தநாளை!

எம் சொந்தங்கள் கரிக்கட்டையாக கொளுத்தப்பட்டதை!
வயிற்றில் உள்ள பிஞ்சையும் வயிற்றை கிழித்து கொளுத்திய கொடுமையை! பயங்கரவாதிகள் நாங்கள் தான் செய்தோம் மோடியின் ஆசியோடு செய்தோம் என்று பகிரங்கமாக சொல்லியதை!

தடயங்கள் அழிக்கப்பட்டதை! சாட்சிகள் மிரட்டப்பட்டதை! வழக்குகள் குழியில் புதைக்கப்பட்டதை!

இருப்பினும், உண்மையை ரெம்ப காலம் ஒழிக்கமுடியாது என்ற நியதிக்கேற்ப சில மனிதநேயர்களின் முயற்சியால் புதைக்கப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், தோண்டப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்கில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைத்துவிடக்கூடாது என்பதிலே ஆரம்பம்முதலே குறியாக இருப்பவர் குஜராத் காவல்துறை தலைவர் பாண்டே என்பவர்.

இதற்கிடையில், இந்தவழக்கில் பாண்டே குறுக்கீடு செய்வதாக கூறி உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிமார்க்கண்டேய கட்ஜூ - மோடி அரசின் நிருவாகத் திறமையின்மையைக் குறிப்பிட்டுக் கூறினார். குஜராத்தில் நடந்தப்பட்ட கொலைகளும், வன்கொடுமைகளும் இந்திய நாட்டுக்கே அவமானத்தை உண்டாக்கிவிட்டன என்றார். குஜராத்தில் சிறுபான்மையின மக்களுக்கு என்ன கொடுமைகள் இழைக்கப்பட்டன என்பதை நாம் அறிவோம். அந்தக் கொடுமைகள் இந்திய நாட்டுக்கு அவமானமானவை என்று நீதிபதி குறிப்பிட்டார்.
காவல்துறைத் தலைவரின் தலையீடு எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தால் அவரை மாற்றவேண்டும் என நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கப்பட்டது.

ஏற்கனவே,திருவாளர் மோடியை 'ரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னனோடு'ஒப்பிட்டு உச்சநீதிமன்றம் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

தர்மத்தின்[முஸ்லிம்களின்]வாழ்வுதனை சூது[இந்துத்துவாக்கள்]கவ்வும்; மறுபடியும் தர்மம்[முஸ்லிம்கள்]வெல்லும். அன்று இந்த மோடிகள் 'குமுதம்-அரசு' சொன்னதுபோல, இருக்குமிடம் தூக்கு மேடையாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்!

நன்றி--நிழல்களும் நிஜங்களும்