சமுதாயமே ஒன்றுபடு... முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் பாசிச பயங்கரவாத கும்பல்களை அடியாளம்காட்டி முஸ்லிம்கலிடையே உள்ள பிரிவினையை களைந்து சகோதாரர்களை ஒருங்கிணைப்பதே இத்தளத்தின் முக்கிய நோக்கம் இன்சாஅல்லாஹ்.. /
மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிந்தவனாவான். மேலும் அல்லாஹ் (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன். மேலும், அல்லாஹ் உதவியாளனாக இருக்கப் போதுமானவன்.
(அத்தியாயம் : அந்நிஸா - பெண்கள், வசனம்: 45)

Tuesday, August 18, 2009

கல்லூரி நிர்வாகத்தின் விரோதப்போக்கு

மங்களூர்: 2003ம் ஆண்டு முஸ்லீ்ம் மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு பர்தா அணிந்து வருவதற்கு பிரான்ஸ் அரசு தடை விதித்தது. இப்போது அதே போன்ற ஒரு தடையை மங்களூரில் உள்ள கல்லூரி நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.
ஆனால் ஒரு குறிப்பிட்ட மாணவிக்கு மட்டுமே இந்த தடை உத்தரவு போடப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மங்களூரில் ஸ்ரீ வெங்கட்ராமன் சுவாமி கல்லூரி என்ற கல்லூரி உள்ளது. இதை பந்த்வாலில் உள்ள எஸ்.வி.எஸ். வித்யவர்த்தகா சங்கம் நடத்தி வருகிறது. இது அரசு உதவி பெறும் கல்லூரி ஆகும்.
இங்கு முதலாமாண்டு பி.காம் படிப்பவர் ஆயிஷா ஆஸ்மின் (19). இவர் பர்தா அணிந்து முகத்தை மூடியபடி கல்லூரிக்கு வந்துள்ளார். இதையடுத்து இவரை அழைத்த கல்லூரி முதல்வர் டாக்டர் சீதாராம மய்யா, முகத்தை மூடியபடி வகுப்புகளுக்கு வரக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.
சமீப காலமாக இந்த கல்லூரியில், பர்தா மற்றும் முகத்தை மூடியபடி வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி ஆஸ்மின் கூறுகையில், இந்தத் தடையால் கடந்த பத்து நாட்களாக நான் வகுப்புகளுக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜூலை 11ம் தேதி கல்லூரியில் சேருவதற்காக நேரடித் தேர்வுக்கு வந்தபோது கூட நான் பர்தாவில்தான் வந்தேன். அப்போது யாரும் அதை ஆட்சேபிக்கவில்லை. இப்போது இப்படி தடை விதித்திருப்பது வியப்பாகவும், வேதனையாகவும் உள்ளது.

பர்தா அணிய தடை விதிக்கப்பட்டதால், நான் சுடிதார் அணிந்து, தலையைச் சுற்றிலும் ஸ்கார்ப்பை சுற்றிக் கொண்டு வந்தேன். ஆனால் அதற்கும் தடை விதித்து விட்டனர். எனது பெற்றோரையும் அழைத்து இதுகுறித்து எச்சரித்தனர் என்றார்.
இந்தத் தடையால் தற்போது வகுப்புகளுக்குப் போக முடியாத நிலையில் உள்ள ஆஸ்மின், திங்கள்கிழமை நடந்த இன்டர்னல் தேர்வையும் எழுத முடியாமல் போயுள்ளார்.

கல்லூரி நிர்வாகத்தின் போக்கு இப்படியென்றால் சக மாணவிகள் செய்த கிண்டலும் ஆஸ்மினை வேதனைப்படுத்தியுள்ளது. நீ தலையில் ஸ்கார்ப் கட்டி வருவதை நிறுத்தாவிட்டால் நாங்கள் காவி ஸ்கார்ப்பை கட்டி வருவோம் என்று அவர்கள் மிரட்டினார்களாம் என்றார் ஆஸ்மின்.

இந்தப் புகார் குறித்து முதல்வர் மய்யா கூறுகையில், கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவை ஏற்றுத்தான் இந்த நடவடிக்கையை அமல்படுத்தியுள்ளோம் என்கிறார்.

இதற்கிடையே, கல்லூரி மாணவ, மாணவியருக்கென உடைக் கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை என்று மங்களூர் பல்கலைக்கழகம் தெளிவுபடுத்தியுள்ளது.
நன்றி:-

http://thatstamil.oneindia.in/news/2009/08/18/india-college-bans-muslim-headscarf-burqas.html

Tuesday, June 30, 2009

பாபர் மசூதி இடிப்புக்கு நான் பொறுப்பேற்கத் தயார் : உமாபாரதி!!


பாபர் மசூதி இடிப்புக்கு நான் பொறுப்பேற்கத் தயார் என்று பாரதீய ஜனசக்தி கட்சித் தலைவி உமா பாரதி கூறியுள்ளார். இதனால் தனக்குத் தூக்குத் தண்டனை கிடைத்தாலும் பிரச்சனை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப் பட்ட லிபரன் விசாரணை ஆணையம் தன்னுடைய விசாரணை அறிக்கையை பிரதமரிடம் இன்று அளித்தது குறித்து, பத்திரிகையாளர்களை தன்னுடைய வீட்டில் சந்தித்த உமாபாரதி, "பாபர் மசூதி இடிப்புக்கு நான் பொறுப்பேற்கத் தயார். ஒரு நல்ல கமாண்டரைப் போல் இதனைக் கூறுகிறேன். இதனால் தன்னைத் தூக்கிலிட்டாலும் எனக்குப் பிரச்சனை இல்லை" என்று கூறினார்.
17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை அறிக்கை பிரதமரிடம் அளிக்கப் பட்டிருப்பது முஸ்லிம்களை சமாதானப் படுத்தவே என்றும் அவர் கூறினார்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலையை அடுத்து 20 ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப் பட்டதற்கு ஒருவரைக் கூட குற்றம் சாட்ட காங்கிரஸ் தலைமையிலான அரசால் முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் மன்னிப்புக் கோரக் கூடாது என்றும் அவர்கள்தான் அதிகமான மக்களை அயோத்திக்கு கரசேவைக்கு அழைப்பு விடுத்தனர் என்றும் அவர் கூறினார்.

Saturday, June 27, 2009

முஸ்லிம்கள் என்றால் என்ன கிள்ளுக்கீரையா?


சுதந்திர இந்தியாவில் 1992 டிசம்பர் 6 ல் பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் சங்பரிவார கும்பல்களால் இடித்து தரைமட்டமாக ஆக்கப்பட்டது. 800 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு அல்லாஹ்வின் இல்லமான பாபரி மஸ்ஜித் தரைமட்டமாக ஆக்கப்பட்டு விட்டது.
சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ஒரு மதத்தினருக்கு எதிராக ஒரு கயவாளிக் கூட்டம் எப்படி இப்படிப்பட்ட அராஜகங்களை செய்ய முடிகிறது. அதற்கு எப்படி ஆளும் கட்சி முதற்கொண்டு அரசாங்கமும் ராணுவமும் அரசாங்க ஊழியர்களில் பலரும் எப்படி துணை போகிறார்கள் (அ) துணை போனார்கள்.
எந்த மனிதனுக்கும் அஞ்சாத, இறைவனுக்கு மட்டுமே அஞ்சுகிற சிலரைக் கொண்ட நிர்வாகம் இந்தியாவிற்கு தேவை என்பதை இவை காட்டுகின்றது. அதாவது காந்தியடிகள் சொன்னது போன்று ஓர் உமரின் ஆட்சி இந்தியாவிற்கு தேவைப்படுகிறது. உண்மையான நேர்மையான ஊழலற்ற ஓர் ஆட்சியை இஸ்லாமியர்களால் மட்டுமே தர முடியும். அது வரை பாபர் மஸ்ஜித் தகர்ப்பு போன்று இன்னும் இது போன்ற அராஜகங்களை தடுத்து நிறுத்த இப்போது இருக்கும் நிர்வாக அமைப்பு போதவே போதாது.
இடிக்கப்பட வேண்டிய வழிபாட்டுத் தலங்கள் இந்தியாவில் எத்தனையோ இருக்கிறது. எத்தனையோ அரசு அலுவலகங்களில் இந்துக் கோவில்கள் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. எத்தனையோ இடங்களில் போக்கு வரத்துக்கு இடையூராக கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. எங்கே ஆலமரம் இருக்கிறதோ அங்கெல்லாம், அது அரசுக்கு சொந்தமான இடமாக இருந்தாலும் அங்கே நிரந்தர கோவில் கட்டப்படும் அதிகாரிகள் அதை கண்டு கொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டிருப்பார்கள். அரசாங்க அலுவலகங்களின் சுவர்களில் இந்துக் கடவுள்களின் படங்கள் மாட்டப்பட்டிருப்பதை பார்ப்பவர்கள் இந்த நாட்டின் மத சார்பற்ற தன்மையை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
இந்திய நாடு மத சார்பற்ற நாடா? மத சார்புள்ள நாடா? என்று கேள்வி கேட்கக் கூடிய அளவிற்கு சட்ட புத்தகத்தில் ஒரு விதமாகவும், நடைமுறையில் வேறு விதமாகவும் இருப்பது தான் நமது நாட்டின் மதசார்பற்ற தன்மை. இதற்கு சட்ட ஒழுங்கை பேணும் நீதிமன்றங்களின் வளாகமும் விதி விலக்கில்லை.
பாபரி மஸ்ஜிதின் வழக்கு கும்பகர்ணனின் உறக்கதில் இருக்கும் நிலையில் முஸ்லிம்களின் உள்ளங்களை டில்லி காவல் துறையும் டில்லி விரிவாக்கத் துறையும் நொறுக்கி இருக்கி இருக்கிறது. டில்லியில் ஒரு பள்ளிவாசலை இடிக்க கனரக வாகனங்களை எடுத்துக் கொண்டு சென்று அந்த பள்ளியின் ஒரு பகுதியை இடித்து விட்டது தான் கொடுமையிலும் கொடுமை.
டில்லியில் மொஹ்ருலி என்ற இடத்தில் இருக்கும் திபியாவாலி பள்ளி வாசலை இடிப்பதற்காக 22 ஜுன் 2009 மாலை 4 மணிக்கு எந்த வித முன்அறிவிப்பும் இன்றி சட்டவிரோதமாக காவல் துறையின் துணையோடு டில்லி விரிவாக்கத் துறை அங்கே சென்றது.
வந்தவர்கள், பள்ளியின் மேற்கூறையையும் சுவரையும் மளமளவென்று இடிக்க ஆரம்பித்தார்கள், இடித்து தள்ளி விட்டார்கள்.
400 ஆண்டு கால பள்ளிவாசல் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கிறதாம். இவர்கள் சொல்வது உண்மையானால் நீதிமன்றம் தானே முடிவு செய்ய வேண்டும். ஏற்கனவே வழக்கு நீதிமன்றம் சென்றும், அது பள்ளி இருந்த இடத்தில் அப்படியே இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொன்ன பிறகும் ஏன் இவர்கள் அதை இடிக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள்.
ஒரு வாதத்திற்கு, அந்த பள்ளி ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தாலும் கூட வழிபாட்டுத்தலங்கள் என்பது மிகவும் உணர்வுபூர்வமான இடங்களாகும், குடியிருக்கும் வீடுகளை விட வழிபாட்டுத்தலங்களை இடிப்பது என்பது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இவர்கள் எப்படி துணிந்து வந்தார்கள்.
அங்கிருந்த பெரியவர்கள் ஏன் இடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு எந்த பதிலும் விரிவாக்கத் துறை அதிகாரிகள் எந்த பதிலும் சொல்ல வில்லை. என்ன திமிறு இருந்திருக்க வேண்டும்.
அதனால் தான் அங்கு கூடி இருந்த பொது மக்கள் கற்களை எடுத்து எறிந்திருக்கிறார்கள். அவர்களை கலைக்க தடியடி நடத்தி இருக்கிறார்கள்.
மக்களின் எதிர்ப்பு அதிகரித்து விட்டதால் அதிகாரிகள் இடத்தை காலி செய்து விட்டு சென்று விட்டார்கள்.
இதுதான் அரசு அதிகாரிகளின் நடவடிக்கையாக இருந்தால் முஸ்லிம்கள் செய்ய வேண்டிய ஒரு காரியம் எஞ்சியிருக்கிறது. வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள பள்ளிவாசலை மீட்பதற்காக தமுமுக நடத்திய போராட்டத்தை அரசாங்கம் தனது பலத்தால் தடுத்து நிறுத்தியது, எப்படி இந்துக்கள் அந்த கோட்டைக்குள் உள்ள கோவிலை மீட்டார்களோ அதே போன்று அறிவிக்கப்படாத பள்ளிவாசல் மீட்பு போராட்டத்தை முஸ்லிம்கள் நடத்தப் போகிறார்கள் இன்ஷா அல்லாஹ்.
அப்போது இந்துக்களிடம் அரசு எப்படி நடந்து கொண்டதோ, அதே போன்று முஸ்லிம்களிடம் நடந்து கொள்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Thanks to -http://www.tmmk-ksa.com/content/news/News_Item.asp?content_ID=469

Wednesday, June 10, 2009

பள்ளிவாசல்களில் தாக்குதல்; தேவை உடனடி பரிகாரம்!


முஸ்லிம்கள் தங்களின் ஒப்பற்ற இறைவனை வணங்குவதற்காக எழுப்பிக்கொண்டவைகள் தான் பள்ளிவாசல்கள். இங்கு உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதமின்றி முஸ்லிம்கள் என்ற ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒன்று கூடுமிடம். இத்தகைய பள்ளிவாசல்கள் மீது அதுவும் தொழுகை நேரத்தில் தாக்குதல் நடத்துவது பல்லாண்டுகளாக நடைபெற்று வருவதும் , இந்த தாக்குதல்களின் பல நூறு பேர் உயிரிழப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்திய சுதந்திர போராட்ட்டத்தின்போது ஜூம்மா மேடைகள் சுதந்திர தாகத்தை ஊட்டும் காரணியாக திகழ்வதை கண்ட வெள்ளையர்கள், ஒரு தொழுகையின் போது வெறியாட்டம் ஆடி முஸ்லிம்களை கொன்ற அந்த மஸ்ஜித் ‘கூன் மஸ்ஜித்’[ரத்தப்பள்ளி] என்று அழைக்கப்படுகிறது.

இலங்கையில் தமிழீழம் பெறப்போகிறோம் என்று புறப்பட்டு, தமிழ்பேசும் சக முஸ்லிம்களை பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்த போது ரத்த சகதியாக்கிய புலிகளின்[?] சாகசத்தை, இன்றும் காத்தான்குடி பள்ளிவாசல் ‘கறைபடிந்த’ சான்றாக திகழ்கிறது.

பாகிஸ்தானில் அவ்வப்போது ஷியா-சன்னி பள்ளிவாசல்களில் தொழுகையின் போது குண்டுகள் வெடிப்பது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. இதற்கு காரணம் இஸ்லாம் காட்டித்தராத பிரிவுகள் என்ற பெயரால் முஸ்லிம்கள் பிரிந்ததுதான்.

ஈரானில் சமீபத்தில் பள்ளிவாசலில் தொழுகையின்போது குண்டு வெடித்து பலர் பலியாகி, உடனடியாக சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மூன்று பேரை பொது இடத்தில் தூக்கிலிட்டது ஈரான் அரசு.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் பள்ளிவாசல்களிலும், அஜ்மீர் தர்காவிலும் குண்டுகள் வெடித்து பலர் உயிரிழந்தனர். இந்த வழக்குகளில், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தலையிலேயே குற்றமும் சுமத்தப்பட்டு இன்று இந்த வழக்கு நிலையும் ‘வெடிக்காதகுண்டு’ போல் அமைதியாக உள்ளது.

நேற்று தாய்லாந்தில் ஒரு பள்ளிவாசலில் தொழுகையின்போது புகுந்த ஒரு கும்பல் சரமாரியாக சுட்டதில்பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிமிடம் வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இவ்வாறாக உலகெங்கிலும் இஸ்லாமிய எதிரிகளின் இலக்காக திகழக்கூடிய பள்ளிவாசல்கள் விஷயத்தில் அந்தந்த நாட்டு அரசுகள் போதிய கவனம் செலுத்துவதில்லை.குறிப்பாக இந்தியாவில் முக்கியமான கோயில்களுக்கு பாதுக்காப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவலர்களை நியமிப்பதோடு அது மட்டுமன்றி, கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தும் அரசு, முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் கேமராக்கள் அமைப்பது இல்லை. ஆனால் முஸ்லிம்கள் நினைத்தால் பள்ளிவாசல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமுடியும் . பல லட்ச ரூபாய் செலவு செய்து பள்ளிவாசல் எழுப்புபவர்கள், சில ஆயிரம் செலவு செய்து கேமராக்கள் பொருத்துவதன் மூலம் பள்ளிவாசலில் அசம்பாவிதம் நடப்பதை பெருமளவு குறைக்கமுடியும். அப்படியே ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட்டால்கூட கேமராக்களின் துணை கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து உலகுக்கு உணர்த்தமுடியும், அதோடு அடித்தவனும் முஸ்லிம்-அழுபவனும் முஸ்லிம் என்ற பாணியில் நம்மீதே காவல்துறை பழிபோடாமல் பாதுகாக்க முடியும். மேலும், சமுதாய வாலிபர்கள் அதிக அளவில் பள்ளிவாசலோடு தொடர்பில் இருக்கவேண்டும். சந்தேகப்படும் வகையில் யாரேனும் தெரிந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பள்ளிவாசல் கட்டுவதோடு நம்பணி நிறைவடைந்து விடாது. அங்கு இறைவனை வணங்க வருபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் நம்பணிதான் என்பதை சமுதாயம் உணரவேண்டும்.

Thanks : நிழல்களும்-நிஜங்களும் - முகவை எஸ்.அப்பாஸ்

Tuesday, June 9, 2009

பொது சிவில் சட்டம் வேண்டும் ஆர்.எஸ்.எஸ் கேம்பில் உச்சநீதி மன்ற முன்னாள் நிதிபதியின் வாழ்த்துச் செய்தி:-

இந்தியாவில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதியான கேரளாவைச் சேர்ந்த கெ.டி. தோமஸ் கருத்து தெரிவித்துள்ளார்.நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பயிற்சி கேம்பில், பாஜக நீண்டகாலமாக கோரி வரும் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவான நீதிபதி கெ.டி. தோமஸின் அறிக்கை வாசிக்கப்பட்டது.ஆர்.எஸ்.எஸ் பயிற்சி கேம்பில் முக்கிய விருந்தினராக கலந்துக் கொள்ள கெ.டி. தோமஸ் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சில தனிப்பட்ட பிரச்சனைகளின் காரணமாக நேரடியாக கலந்து கொள்ள முடியாமையைத் தெரிவித்து, அவரின் வாழ்த்து கடிதத்தை அனுப்பியிருந்தார். கேம்பில் அவருக்குப் பதிலாக அவர் அனுப்பிய வாழ்த்து கடிதம் படிக்கப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:"இந்திய அரசியல் சட்டத்தின் 44 ஆவது பிரிவில் கூறப்படும் ஆலோசனைகளை நடைமுறைபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பவர்களை இனவாதிகளாக முத்திரை குத்துவது வேதனைக்குரியது. நாட்டில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு எதிராக ஏற்றுக் கொள்ளத் தக்க காரணங்களைக் கூறுவதற்கு எவராலும் முடியாது. மதத்தைத் தனிமனிதன் சார்ந்தே காண வேண்டும். ஒவ்வொருவரும் இந்தியர் என்பதற்கே முக்கியத்துவம் வழங்க வேண்டும். இவ்விஷயத்தை நாட்டு மக்களுக்குப் புரிய வைக்க ஆர்.எஸ்.எஸ் முன்வர வேண்டும்" என்று அவ்வாழ்த்தில் கூறியுள்ள அவர், பொது சிவில் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் ஊடகங்களையும் விமர்சித்துள்ளார்.
நன்றி :- பாலைவனத் தூது

Saturday, February 14, 2009

குளிர் பானம் அருந்தும் முஸ்லிம்களே எச்சரிக்கை!!


இந்தியாவில் மாட்டின் சிறுநீரைக் (மூத்திரத்தைக்) கொண்டு ஒரு குளிர் பானம் வருகிறது..

தட்ஸ்தமிழில் வந்த செய்தி இதோ:

கோக்குக்கு போட்டி-ஆர்.எஸ்.எஸின் 'கோமிய பானம்'!

பெங்களூர்: பெப்சி, கோக் ஆகிய குளிர்பானங்களுக்குப் போட்டியாக, பசுவின் சிறுநீரை (கோமியம்) வைத்து தயாரிக்கப்பட்டுள்ள புதிய குளிர்பானத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த குளிர்பானத்திற்கு கெள ஜல் என அது பெயரிட்டுள்ளது.
இந்த குளிர்பானம் தற்போது ஆய்வக சோதனையில் உள்ளதாம். விரைவில் இது மார்க்கெட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக இதுதொடர்பான ஆய்வுக் குழுவின் தலைவரான ஓம் பிரகாஷ் என்பவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த குளிர்பானத்தில் கண்டிப்பாக சிறுநீர் வாசனை அறவே இருக்காது. உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. தற்போது மார்க்கெட்டில் உள்ள கார்போனைட் அடங்கிய குளிர்பானங்களைப் போல உடலைக் கெடுக்காது. எந்த வகையான நச்சுக் கிருமிகளும் இதில் இருக்காது என்றார் ஓம் பிரகாஷ்.
இந்தியாவில் தற்போது வெளிநாட்டு குளிர்பானங்கள்தான் கோலோச்சி வருகின்றன. இவற்றை ஒழித்துக் கட்ட வேண்டும், இந்துத்வாவை இதிலும் புகுத்த வேண்டும் என இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. அந்த வகையில் இந்துக்கள் புனிதமாக கருதும் பசுவின் சிறுநீரை அடிப்படையாகக் கொண்ட குளிர்பானத்தை ஆர்.எஸ்.எஸ். தயாரித்துள்ளது.
2001ம் ஆண்டுதான் கோமியம், உடல் கோளாறுகளை குறிப்பாக கல்லீரல் பிரச்சினைகளை தீர்க்கும் அருமருந்து என பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் பிரசாரத்தைத் தொடங்கின என்பது நினைவிருக்கலாம். இதுதவிர உடல் பருமனையும் குறைக்கும் அரு மருந்து கோமியம். புற்று நோயைக் கூட இது குணப்படுத்தும் எனவும் இந்த அமைப்புகள் கூறி வந்தன.
ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடந்த 1994ம் ஆண்டு வெளிநாட்டு குளிர்பானங்களையும், நுகர்வோர் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி பெரும் போராட்டத்தையும் மேற்கொண்டது நினைவிருக்கலாம்.
புதிய கோமிய குளிர்பானம் குறித்து ஓம் பிரகாஷ் மேலும் கூறுகையில், நாங்கள் தயாரித்துள்ள கெள ஜல் குளிர்பானம் பசுவின் சிறுநீரைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் சில மருத்துவ மூலிகைகள், ஆயுர்வேத மூலிகைகளின் சாறும் சேர்க்கப்படும்.
இது விலை மலிவானது. விலை குறித்து இப்போது அறிவிக்கும் திட்டம் இல்லை. முறைப்படி தொடங்கப்பட்டவுடன் அனைத்து விவரமும் தெரிய வரும்.
தற்போது உள்ள அமெரிக்காவின் குளிர்பானங்களுக்கு எங்களது புதிய குளிர்பானம் கடும் போட்டியைக் கொடுக்கும். அவர்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில் நாங்கள் மார்க்கெட்டிங் செய்யவுள்ளோம் என்றார்.

உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் இந்த கோமிய குளிர்பானத்தை ஏற்றுமதி செய்யப் போகிறதாம் ஆர்.எஸ்.எஸ்.

நன்றி: http://thatstamil.oneindia.in/news/2009/02/14/14-rss-to-launch-cow-urine-as-soft-drink.html

Sunday, February 8, 2009

"அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம்": ராஜ்நாத் சிங்


பி.ஜே.பி.யின் தேசிய செயற்குழு கூட்டம் மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. தேசிய கவுன்சில் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட‌து. நேற்றைய (பிப்ரவரி 7) கூட்டத்தில் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசும் போது:

"மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. அதற்கு மாறாக பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக உள்ளது. இனி வரும் காலங்களில் இந்த கூட்டணி மேலும் வலுவடையும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும். அந்த கூட்டணிக்குள் முரண்பாடுகள் உள்ளன. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆக்கப்பூர்வமானது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதில் சிவசேனா, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. வரும் காலத்தில் இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும்.

அத்வானியை போன்ற தொலைநோக்கு பார்வை கொண்ட, பக்குவப்பட்ட தலைவர்கள் யாரும் மற்ற கூட்டணிகளில் இல்லை. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியில் அமர்த்த வேண்டும். நாடு தற்போது பல்வேறு சவால்களை எதிர்நோக்கி உள்ளது. பி.ஜே.பி. கட்சியால் இந்த சவால்களை சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

அயோத்தி பிரச்சினையை தீர்க்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்த அரசு 5 நிமிடம் கூட செலவிடவில்லை. ராமர் பாலம் பிரச்சினையிலும் மத்திய அரசு நடந்து கொண்ட விதம் வருத்தம் அளிக்கிறது. ராமர் மீது பி.ஜே.பி. வைத்திருக்கும் நம்பிக்கையை யாரும் சீர்குலைக்க முடியாது. பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும். அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்போம். தேர்தலில் பி.ஜே.பி.க்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் பட்சத்தில், தேவைப்பட்டால் இதற்காக சட்டமும் கொண்டு வரப்படும்.


மகாத்மா காந்தியின் போதனைகளை காங்கிரசார் யாரும் பின்பற்றுவதில்லை; சங்க பரிவார அமைப்புகள் மட்டுமே அவைகளை கடைப்பிடித்து வருகின்றன. மகாத்மா காந்தி அருளித்த போதனைகளை காங்கிரஸோ அல்லது அதன் பரிவார அமைப்புகளோ பின்பற்றுவதில்லை. பி.ஜே.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புகள்தான் அதைக் கடைப்பிடித்து வருகின்றன. காந்தி என்ற குடும்பப் பெயரை மட்டும்தான் காங்கிரஸ் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். மகாத்மாவின் அரசியல் மரபுரிமைப் பண்புகள் மற்றும் காந்தியக் கொள்கைகளை எத்தனை காங்கிரஸார் பின்பற்றுகின்றனர் என்பதை பார்க்க வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பிந்தைய 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் தனது கொள்கைகளில் காந்திய சிந்தனைகளை நடைமுறைப்படுத்தியது இல்லை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கொள்கைகளைத்தான் அவர்கள் பிரதிபலிக்கச் செய்தனர். ஆனால் காந்தியின் இந்து ஸ்வராஜ்யத்தை கடைப்பிடிக்க மறந்துவிட்டனர் " என்றார் ராஜ்நாத் சிங்.

ராஜ்நாத் சிங்கின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி, "ராமர் பெயரை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட பி.ஜே.பி. முயற்சிப்பதாகவும் எனவே ராமர் அவர்களை மன்னிக்கமாட்டார். உண்மையில் ராமர் கோவில் கட்டுவது பி.ஜே.பி.யின் நோக்கம் கிடையாது. ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போது மட்டும் ராமர் கோவில் கட்டுவதாக உறுதி அளித்து விட்டு மக்களை ஏமாற்றி வருகிறது." என்றார் அவர்.