Sunday, November 30, 2008
மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னணியில்மொசாத்-ஆர்.எஸ்.எஸ்
- அமரேஷ் மிஸ்ரா
இந்தியாவை மட்டுமின்றி உலகையே அதிர்ச்சியடைய வைத்த மும்பை தீவிரவாதத் தாக்குதலை இந்திய இராணுவத்தினரும் அதிரடிப்படையினரும் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்து அனைவரையும் நிம்மதியாக மூச்சு விட வைத்திருக்கும் சூழலில், தற்பொழுது அனைவரின் கவனமும் இத்தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்களை குறித்து அறிந்து கொள்வதில் நிலை கொண்டுள்ளது.
முதலில் சிமியின் மற்றொரு பதிப்பான டெக்கான் முஹாஜிதீன் என்ற புதிய தீவிரவாத அமைப்பு தான் இத்தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியிலும் செயல்பட்டுள்ளது என எப்பொழுதும் போல் மேல்மட்டத்தில் ஹிந்த்துவாவின் ஆக்டோபஸ் கரங்களால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள பத்திரிக்கைகளால் வெளியிடப்பட்ட மின்மடலை நம்பி அலறிய இந்திய உளவுத்துறை பின்னர் படிப்படியாக, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ, லஷ்கரே தொய்பா, அல் காயிதா என ஊகங்களை வாரி வீசி வருகிறது.
இந்நிலையில் இத்தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் சம்பவ இடத்தில் நேரில் இருந்து அனைத்தையும் கவனித்த பிரபல பத்திரிக்கையாளரும் மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான டாக்டர். அமரீஷ் மிஸ்ரா, அமிழ்ந்துக் கிடக்கும் உண்மைகளின் முடிச்சுகளை அவரது ஆழ்ந்த ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வர முயல்கிறார். இந்திய உளவுத்துறையும் அரசும் வெறுமனே யூகங்களையும் பொய்ப் பிரச்சாரங்களையும் நம்பி எப்பொழுதும் போல் உண்மையான குற்றவாளிகளைக் கோட்டைவிடுவதை விடுத்து, நேர்மையாக இச்சந்தேகங்களின் பாலும் தனது கவனத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது நடுநிலையாளர்களின் விருப்பமாகும்.
இரண்டாயிரம் பக்கங்களையும் இரண்டு பாகங்களைக் கொண்ட டாக்டர். அமரீஷ் மிஸ்ரா அவர்களின் சமீபத்திய நூலான "War of Civilizations: India AD 1857" கடந்த மார்ச் 2008 இல் இந்திய துணை குடியரசுத் துணைத் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
திரு. அமரீஷ் மிஸ்ரா அவர்களின் சொற்களிலிருந்து....
அதிகாலை நான்கு மணியாகி விட்டிருந்தது. மும்பையிலிருந்து செய்திகளைத் தொகுத்துக் கொண்டுள்ளேன்.
கண்களை மூடி சிறிது நேரம் ஓய்வெடுக்க முடியவில்லை. மும்பை பயங்கரவாதிகளின் தாக்குதலில் சிக்கியுள்ளது.
எவர்கள் மஹாத்மா காந்தியைக் கொன்றார்களோ, எவர்கள் பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கினார்களோ அவர்களே 16 க்கும் மேற்பட்ட குழுக்களாக மும்பையின் தாஜ், ஓபராய் மற்றும் பல்வேறு உயர்தர ஹோட்டல்களை தன் வசப்படுத்தியுள்ளனர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முதல் முறையாக "எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் குற்றம் சாட்டப்படவில்லை!"
இந்தத் தாக்குதலில் மும்பை ATS துறையில் தலைமை அதிகாரி ஹேமந்த் கர்கரேவும் அதில் சம்பந்தப்பட்ட மற்ற அதிகாரிகளும் குறி வைத்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏன் இவர்கள் கொல்லப்பட வேண்டும்? காரணம் இருக்கிறது.
மாலேகான் வெடிகுண்டு வழக்கின் பின்னணியின் மூளையாக உள்ள பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்-பஜ்ரங்தள்-வி.ஹெச்.பி ஆகியோரின் கூட்டுச் சதியில் தொடர்புடைய பிரக்யா சிங், இராணுவ உயர் அதிகாரி புரோஹித் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுக் கொண்டும் விசாரணைகள் முழு வேகத்தில் முடுக்கி விடப்பட்டுக் கொண்டும் வரும் நேரமிது.
இவர்கள் அத்தனை பேரையும் கைது செய்தவர் போலீஸ் உயர் அதிகாரி கார்கரே!
இவர்கள் கைது செய்யப்பட்ட நாள் முதல் கார்கரேவின் மேலதிகாரிகள் உட்பல பல பேரின் அச்சுறுத்தலுக்கு ஆளானார் கார்கரே! எல்.கே அத்வானி மற்றும் பிஜேபி தலைவர்கள் உட்பட பல அரசியல்வாதிகள் இவரது தலைக்கு குறிவைத்தனர்.
மும்பையில் நிகழ்ந்த இந்த பயங்கரவாதத்தின் முதல் பலி - கார்கரே தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மும்பையில் உள்ள யூதர்களின் ஒரே கட்டிடமான நரிமன் ஹவுஸில் இந்த கொடூரமான நிகழ்வு முதன் முதலில் நடந்தது. நரிமன் பகுதியில் வாழும் குஜராத்தி ஹிந்துக்கள் பலர் நரிமன் ஹவுஸில் நடந்த படுகொலையே முதன் முதலாக மும்பையில் நடந்த நிகழ்வு என்று கூறுவதை பல்வேறு தொலைகாட்சிகள் நேரடி ஒளிபரப்பில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே யூதர்களின் குடியிருப்பான இந்த நரிமன் ஹவுஸில் சந்தேகத்திற்கிடமான பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளதாக அவ்வப்போது கூறியுள்ளனர். ஆனால், அதனை ஒட்டிய எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
விளைவு? எண்ணிப்பார்க்க இயலா பயங்கரம் நடந்தே விட்டது.
ஆம்! இஸ்ரேலின் உளவு நிறுவனமான "மொஸாத்" இந்த ஒட்டுமொத்த பயங்கரவாதச் செயலுக்குக் காரணம் என்பது தெளிவாகி விட்டது. மும்பையில் நிகழ்ந்து வரும் இந்தத் தாக்குதலுக்கு மொஸாத்தும் அதன் கூலியாட்களும் இதன் பின்னணியில் உள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
உலகமே அதிர்ந்து நின்று நேரலை நிகழ்ச்சியில் வேடிக்கை பார்த்து வரும் இத்தனை பெரிய பயங்கரவாதத்தைத் திட்டமிடவும் நிகழ்த்திக் காட்டவும் சாதாரண தீவிரவாத அமைப்புகளால் முடியாது.
அதே வேளையில் இத்தகைய பெரிய பயங்கரவாதத்தை இந்தியாவின் மதவாத சக்தியின் துணையில்லாமலும் நடத்த முடியாது. இந்த பயங்கரவாதத்திற்குக் காரணமான...
பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்-பஜ்ரங்தள்-வி.ஹெச்.பி ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட வேண்டும்.
அத்வானி மற்றும் அவரது சகாக்கள் கைது செய்யப்பட வேண்டும்.
முன்னெச்சரிக்கையில்லா கையாலாகா சிவராஜ் பாட்டில் பதவி விலக வேண்டும். (இந்த கட்டுரை இணையேற்றம் செய்யும் போது சிவராஜ் பட்டில் மற்றும் எம்.கே நாராயணன் ஆகியோர் ராஜினாமா என்றும் உள்துறை அமைச்சராக பா.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ள தகவல்களை ஊடகங்களின் மூலம் காண முடிந்தது.)
இந்திய நாட்டில் இது ஒரு கறுப்பு நாட்கள். இது இந்தியர்களுக்கும் இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்களுக்கும் வெட்கக் கேடான நாட்கள். முஸ்லிம்களும் நடுநிலை ஹிந்துக்களும் இது நாள் வரை கூறி வந்த கூற்றுக்கள் உண்மை என்று மெய்ப்பிக்கப் பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்ஸுடம் கூட்டுச் சேர்ந்து இஸ்ரேல் இந்தியாவை நிலை குலைய மட்டுமில்லை, முற்றிலுமாக அழித்தொழிக்க திட்டமிட்டுள்ளன. இஸ்ரேலுடனான உறவை இந்தியா உடனடியாக அறுத்தொழிக்க வேண்டும்.
வீரத் தியாகி கார்கரேவிற்கும் அவருடன் துணிச்சலாக ஹிந்துத்துவ பயங்கரத்தை உலகிற்கு வெளிப்படுத்திய அவரது ATS குழுவிற்கும் இந்தியர்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.
உருது டைம்ஸ் இதழில் வெளியான புகைப்படத்தில் மொஸாத் மற்றும் எக்ஸ் மொஸாத் நபர்கள் இந்தியாவிற்கு வந்ததும் ஹிந்துத்துவா சாதுக்கள் பலரைச் சந்தித்து திட்டமிட்டதும் வெளியாகியுள்ளது. மிகப் பெரிய சதித்திட்டம் வீதிக்கு வந்துள்ளது.
இது உணர்ச்சி வசப்பட வேண்டிய நேரம் அல்ல. ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருணம், முக்கியமாக இந்தியாவிலுள்ள ஹிந்துக்களாகிய நாம்! காந்தியைக் கொன்ற கயவர்கள் மீண்டும் தலை தூக்கியுள்ளனர்.
தூய சனாதானக் கொள்கையைப் பின்பற்றக் கூடிய இந்துக்களாகிய நாம், தேசத்தின் மீது தூய பற்றுக் கொண்டவர்களாக உள்ளோம். இங்கே ஹிந்துத்துவாக்கள் செய்து கொண்டிருப்பது தேச விரோத செயல் என்பதை தாய் நாட்டை நேசிக்கும் நாம் முழுமையாகப் புரிந்து அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும். பிரக்யா சிங், அத்வானி போன்ற முழு நேர தேச விரோதிகளை இனம் காண வேண்டும். இவர்கள் அழிக்கப் பட வேண்டியவர்கள். ஹிந்துக்களில் இவர்கள் சார்பாக சிந்திப்பவர்கள், அதன் மூலம் விளையும் பாதகங்களை எண்ணிப் பார்க்கவேண்டும்.
இது ஒரு தேசியம் சார்ந்த கேள்வி!
நாட்டை சுடுகாடாக்கும் மதவெறிபிடித்த ஹிந்துத்துவாவுடன் இந்துக்கள் போரிட வேண்டும். தேவைப்பட்டால் இந்த இஸ்ரேலுடன் கை கோர்த்து நாட்டை நிர்மூலமாக்கும் இந்த நாச சக்திகளுடன் இந்துக்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் உள்நாட்டுப்போர் கூட நிகழ்த்தத் தயாராக வேண்டும்.
- அமரேஷ் மிஸ்ரா(+91-9250305699)
~~~~
நன்றி: சத்தியமார்க்கம்.காம்
Saturday, November 29, 2008
மும்பை தாக்குதல் - ஹிந்து தீவிரவாதிகளே காரனம் - சீனா (CHINA)
இந்தியாவில் உள்ள சீன அரசின் பத்திரிக்கை செய்தியாளர் குறிப்பிடுகையில் மும்பை தாக்குதலில் ஈடுபடடவர்களின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன அவற்றில் மக்கள கவணிக்க மறந்த ஒன்று இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனவைரும் தங்கள் வலது கையில் ஹிந்துத்துவ தீவிரவாதிகள் அணியும் காவி நூலை கட்டியிருப்பதுதான்.
குஜராத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களும், அஸ்ஸாமிலும், ஒரிஸாவிலும் கிருத்துவ மக்கள் மீது தாக்குதல் நடத்தும் ஹிந்துத்துவ தீவிரவாதிகள் எப்போதும் இதுபோல் தங்கள் வலது கையில் காவி நூலை அணிந்திருப்பது வழக்கம்.சீனா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளின் உளவுத்துறைகளும் ஹிந்துத்துவ அமைப்புகள் மீது தங்கள் சந்தேகத்தை பதித்துள்ள நிலையில் இந்திய ஊடகங்கள் மட்டும் திரும்ப திரும்ப "முஸ்லிம் தீவிரவாதிகள்" பாடலை தொடாந்து பாடிக் கொண்டிருப்பது யாரை காப்பாற்ற என்றுதான் தெறியவில்லை.உண்மைகளை இந்திய உளவுத்துறையும், காவல்துறையும் தான் வெளிக்கொணர வேண்டும். இந்த வழக்கில் யார் முக்கிய விசாரனை நடத்த வேண்டுமோ அந்து முக்கிய நபரான ATS தலைவர் மேந்த் கர்கரே உட்பட முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் தான் இந்த மும்பை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் முதல் குறியாக இருந்துள்ளனர். இதில் இருந்தே நாம் புறிந்து கொள்ளலாம் இந்த தாக்குதலின் பின்னணி யார் என்று. திரு. ஹேமந்த் கர்கரே அவர்கள் மறைந்தாலும் அவரைப்போன்ற பல நியாயமான நேர்மையான அதிகாரிகள் இன்னும் இந்திய காவல்துறை உளவு நிறுவனங்களில் உள்ளனர் அப்படிப்பட்ட அதிகாரிகளை கொண்டு இந்த தாக்குதலின் உண்மை முகங்களை மக்கள் முன் அடையாளப்படுத்த வேண்டும். ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ளவர்கள் இந்த தீவிரவாதிகளுக்கு அஞ்சாமல் இதை செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Thanks : Indian Express
Wednesday, November 26, 2008
டிசம்பர்-6-ல் இந்து முன்னணி ரயில் மறியல்
போராட்டங்களை தடை செய்வதற்கு இது அரசின் சதியா?
அயோத்தியில் ராமர் கோவில்: இந்து முன்னணி ரயில் மறியல்
சென்னை : அயோத்தியில் கோவில் எழுப்ப அனுமதி அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி, டிசம்பர் 6ம் தேதி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது.இது குறித்து இந்து முன்னணி மாநில அமைப் பாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 1949ம் ஆண்டு, ராமர் கோவில் இடம் யாருக்கு சொந்தமானது என்பதற்காக ஒரு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தொடர்ந்து 60 ஆண்டு ஆகிவிட்டது.இதில் 55 ஆண்டுகள் இந்தியாவை காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. ஆனால், இந்த வழக்கின் தீர்ப்பை இதுவரை கூறாமல் இந்துக்களுக்கும் - முஸ்லிம்களுக்கும் அரசியல்வாதிகள் சண்டைமூட்டிவீட்டு ஓட்டு பெறுகின்றனர்.எனவே, கோர்ட் தீர்ப்பை உடனடியாக வெளிட்டு, அயோத்தி ராமர் கோவில் பிரச்னை யை நிரந்தரமாக முடிக்க வேண்டும். 100 கோடி இந்துக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய ராமர் கோவிலை அயோத்தியில் கட்ட மத்திய அரசு உடனே அனுமதி தரவேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பர் 6ம் தேதி தமிழகமெங்கும் இந்து முன்னணி இயக்கம் ஆர்ப்பாட்டமும், ரயில் மறியல் போராட்டமும் நடத்தவுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி : தினமலர்
இதற்க்கு முன்பாகவே டிசம்பர்-6-ல் பல்வேறு போராட்டங்களை நடத்திய த மு மு க இவ்வருடம் ரயில் மறியல் போராட்டம் நடத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அதற்க்கு எதிராக இப்போது இந்து முன்னணி இந்த அறிக்கையை வெளிட்டுள்ளது.மேலும் த மு மு க செய்தியை வாசிக்க அழுத்தவும் ---->டிசம்பர் 6-ல் ரயில் மறியல் போராட்டம்!
இந்தியா முழுதும் போராட்டத்தை விரிவுப்படுத்த முயற்சி!!
தலைமைக் கழகம் அறிவிப்பு!!போர்கால அடிப்படையில் பணிகள் தொடக்கம்!!!
முஸ்லீம் பெண்களே..RSS-பிடியில் விலாதிர்கள்!!
5. இஸ்லாமிய நாடுகளுக்கும், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையேயும் போதைமருந்துகள் விநியோகமும், விபச்சாரமும் பெருமளவு நடைபெற வழிவகை செய்திட வேண்டும்.
6. முஸ்லிம் சமூகத்தினுள் ஊடுறுவிச் சென்று முஸ்லிம் பெண்களுடன் உறவு கொண்டு கருத்தரிக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஹிந்துவாக பிறக்க வைப்பது மிகவும் வலியுறுத்தப்படுகிறது. மேலும் RSS-கொள்கையினை படிக்க இதை அழுத்தவும்-----> அதிர்ச்சிக்குள்ளாக்கும் படியான அந்த 13 கட்டளைகள்
Tuesday, November 25, 2008
நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்துத்துவ பயங்கரவாதிகள்
இந்திய தாய்நாட்டில் அத்துணை பயங்கரவாதங்களையும் அழகாக நடத்திவிட்டு அதை அலுங்காமல் குலுங்காமல்முஸ்லிம்கள்மீது சுமத்திவிட்டு பசுந்தோல் போர்த்திய பு[எ]லியாக வலம் வந்துகொண்டிருந்த இந்துத்துவா பயங்கரவாதிகள் கையும்,கணினியுமாக மாட்டிக்கொண்டவுடன் மக்களின் கவனத்தை திசைதிருப்புவதர்க்காகவும், தங்களுக்கு மக்கள் மத்தியில்,குறிப்பாக சங்க்பரிவாரத்தினரின் ஆதரவை அதிகப்படுத்திக்கொள்ளவும் விசாரணை என்ற பெயரால் காவல்த்துறையினர் எங்களை கொடுமைப்படுத்துகிறார்கள்.என்று ஒப்பாரி வைக்கத்தொடங்கியுள்ளனர்.
நேற்று மும்பை நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர் செய்யப்பட்டபோது,பெண்சாது[?]காவல்துறையினர் என்னை நள்ளிரவில் எழுப்பி ஆபாசபடத்தை காட்டி சித்ரவதை செய்வதோடு ஆபாசவார்த்தைகள் பேசுகின்றனர்.மேலும்,நிர்வாணமாக்கி அடிப்போம் என்றுகூறுவதோடு குற்றத்தை ஒப்புக்கொள் இல்லையேல்,இந்த சம்பவத்தில் பி.ஜெ.பி.தலைவர்களுக்கு தொடர்பு உண்டு என்று கூறசொல்கிறார்கள்,என்று கூறியுள்ளார்.
அடுத்து முன்னாள் ராணுவபுகழ் திருவாளர்.புரோகித், விசாரணை அதிகாரிகள் என்னை தலைகீழாக கட்டித்தொங்க விட்டனர் என்கிறார்.
அய்யா அப்பாவிகளே[?] குற்றவாளிகளை விசாரிக்கும் அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டா விசாரிப்பார்கள்..? சரி பொய்யை சொன்னாலும் பொருத்தமாக சொல்லவேணாமா..? இப்படியா அள்ளிவிடுறது..?
இந்த சாது[?]க்கள் கொடுமைப்படுத்தப்படுவதை[?]தாங்காமல் பரமசாது அத்வானிமற்றும் பால்தாக்கறேக்கள் புலம்புகிறார்கள். என்னசெய்வது உப்பைத்தின்னவன் தண்ணி குடிச்சுத்தானே ஆகணும்.
நன்றி..நிழல்களும் நிஜங்களும்
Monday, November 24, 2008
இதோ மீண்டும் அந்த கறுப்புநாள்...
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் கா(வி)வல்துறை
Sunday, November 23, 2008
கோட்சே குடும்பத்துப் பெண்ணின் குரல்!!
ஹிமானி, காந்திஜியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்ஸேயின் சகோதரன் கோபால் கோட்சேயின் மகளாவார். ஹிமானியின் கணவர், ஹிந்துத்துவ ஆச்சாரியன் சாவர்க்கருடைய மருமகன் ஆவார்."மாலேகோன் முதலான இடங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் ஹிந்துக்களின் நியாயமான எதிர்வினைகளாகும். தங்களுடைய மக்களுக்கு எதிராக நிரந்தரமாக அக்கிரமம் நடக்கும் வேளையில், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்ற தத்துவங்கள் எதுவும் இக்காலத்தில் விலை போகாது" என அவுட் லுக் தினசரிக்கு ஹிமானி வழங்கிய பேட்டியில் ஹிந்துத்துவ வாதிகளின் அட்டூழியங்களை நியாயப் படுத்தி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மேற்கண்டவாறு கூறினார்."தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டமே எங்களின் இலட்சியம். அதனைத் தடுப்பதில் அரசு தோல்வியடைந்தால், ஹிந்துக்கள் எதிர்வினையாற்றுவர். ப்ரக்யா சிங் துவங்கிய மாலேகோன் குண்டு வெடிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராகக் காவல்துறை சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சரியானவையே. தீவிரவாதிகளுக்கு எதிராக அவர்கள் எதிர்த் தாக்குதல் மட்டுமே நடத்தியுள்ளனர்" என ஹிமானி கூறினார்."துப்பாக்கியைத் துப்பாக்கி கொண்டே எதிர்கொள்ள வேண்டும் என்றுதான் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஆர். ஆர். பாட்டீல் கூறியது தெரியுமில்லையா? எனில், வெடிகுண்டுக்குப் பதிலாக ஏன் வெடிகுண்டு ஆகக் கூடாது? மாலேகோன் வழக்கில் கைது செய்யப்பட்ட மேஜர் சமீர் குல்கர்ணி முதலானவர்கள், உண்மையில் தேசப்பற்று மிக்கவர்களாவர். தேசப் பற்றாளர்கள் மீது குற்றம் சுமத்தி, ஹிந்துக்களைப் பலவீனப் படுத்துவதற்கு அரசு முயல்கிறது" எனவும் மகாராஷ்டிர அரசுக்கு எதிராக ஹிமானி குற்றம் சாட்டினார்."குஜராத் கலவரம் முதலானவற்றில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என முஸ்லிம்கள் கூறுகின்றனர். மதத்தை முன் நிறுத்தியே அவர்கள் அவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர். குஜராத் நிகழ்வைக் குற்றச் சாட்டாகச் சொல்பவர்கள் குடியேறுவதற்கு உலகில் பல முஸ்லிம் நாடுகள் உள்ளன. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் உடையவர்கள் அங்குச் சென்று வாழ்ந்து கொள்ளட்டும். ஹிந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டியது எங்களின் கடமை" எனவும் ஹிமானி கூறினார்.மும்பைக் கலவரத்தைக் குறித்து சமர்ப்பிக்கப் பட்ட ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையில் தனக்கு நம்பிக்கை இல்லை என ஹிமானி கூறினார். "குஜராத் கலவரம் குறித்த நானாவதியின் அறிக்கையிலும் உங்களுக்கு நம்பிக்கையில்லையா?" என்ற கேள்விக்கு, "அந்த அறிக்கையினைக் குறித்துத் எனக்கு அதிகம் எதுவும் தெரியாது; எதிர் தாக்குதல் நடத்துவது மனிதர்களிடையே சகஜமானது" என்று அவர் பதிலளித்தார்."தற்பொழுது நடப்பவை அனைத்தும் ஹிந்துக்களின் யதார்த்தமான எதிர்வினைகளே! ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டிக் கொண்டு நிற்க வேண்டுமோ? நாங்கள் எதிர்த்துத் தாக்கவே செய்வோம். அதற்காக ஹிந்துக்களுக்கு எதிராக எவராவது நடவடிக்கை எடுப்பின் அவர்களையும் நாங்கள் எதிர்ப்போம்" என ஹிமானி ஆக்ரோஷத்துடன் எச்சரிக்கை விடுத்தார்."ஜெர்மனியில் வசிப்பவர்களை ஜெர்மனியர் என்றும் பிரிட்டனின் வசிப்பவரை பிரிட்டீஷியர் என்றும் அழைக்கும் பொழுது, ஹிந்துஸ்தானில் வசிப்பவர்களை ஹிந்து என்று ஏன் அழைக்கக் கூடாது?" என அதிபுத்திசாலி(!)த் தனமான கேள்வி ஒன்றை ஹிமானி எழுப்பினார்."அனைவரும் ஹிந்துக்களான இந்த ஹிந்துஸ்தானை ஒரு ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும். இதனை அங்கீகரிக்க மனமில்லாதவர்கள் நாட்டை விட்டுப் போகலாம். தீவிரவாதத்தை அழிப்பதில் எந்த அரசு தோல்வியடைந்தாலும் அவர்களைத் தோற்கடிக்க ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும். பங்களாதேசிகள் முதலான வெளிநாட்டவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்" என அவர் கூறினார்.***ஒருமுறை குமுதம் இணையத் தொலைகாட்சியில் த.மு.மு.க. தலைவர் பேரா. ஜவாஹிருல்லாவுடனான நேர்முக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவி, ஒரு கேள்வியின் பொழுது, "இந்தியாவை மதசார்பற்ற நாடு எனக் கூறக்கூடாது. இந்தியாவில் மத சார்பற்ற அரசு நடக்கிறது என வேண்டுமானால் கூறலாம். விடுதலையின் பொழுது நேரு முதலானவர்கள் இப்புனித ஹிந்து மண்ணிற்கு துரோகம் இழைத்து விட்டனர். பாரம்பரிய ஹிந்து மண்ணான இந்தியா, ஒருபோதும் ஒரு மதசார்பற்ற நாடாக இருக்கவே முடியாது. எனவே இம்மண்ணை ஹிந்து மண், ஹிந்து நாடு என்று தான் அழைக்க வேண்டும்" என்று கூறியதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.ஆர்.எஸ்.எஸ் எந்த அளவிற்கு இந்திய மக்களின் மனதில் விஷத்தை ஏற்றி மூளைச் சலவை செய்கிறது என்பதற்கு இதனைவிடச் சிறந்த வேறு ஆதாரம் எதுவும் தேவையில்லை.செய்யும் அக்கிரமங்களை நியாயப் படுத்துதல், தாங்கள் செய்வது தவறு என்பதை உணர்ந்து அதிலிருந்து விலகுவதை விடுத்து, செயற் படுத்தும் அத்தனை அக்கிரமங்களையும் தேசப்பற்றாக நினைத்துக் கொண்டு, ஒரு கற்பனை உலகத்தில் சஞ்சரித்தல் என ஆர்.எஸ்.எஸ் உருவாக்கி விட்டுள்ள இலட்சகணக்கான தொண்டர்கள், இந்தியாவின் இறையாண்மையையும் இந்திய மக்களின் ஒற்றுமையையும் தகர்க்கப் போகும் வெடிகுண்டுகள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.இந்த வெடிகுண்டுகளைச் செயலிழக்க வைக்க வேண்டியது மத்திய-மாநில அரசுகளின், காவல்-நீதித்துறைகளின் கட்டாயக் கடமையாகும்.நன்றி : சத்தியமார்க்கம்.காம்
Tuesday, November 18, 2008
நான்டெட்டில் தொடங்கிய இந்து தீவிரவாதம் - பரபரப்பு தகவல்கள்
2 ஆண்டுகளுக்கு முன்பே ..
2 ஆண்டுகளுக்கு முன்பே இந்து தீவிரவாத கட்டமைப்பு குறித்த தகவல் பாதுகாப்பு படையினருக்கு முதலில் கிடைத்துள்ளது. இதுதொடர்பான விரிவான விசாரணை அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிக்கைகள் நான்டெட் கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டன.
2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்டெட்டில் உள்ள ஓய்வு பெற்ற நீர்ப்பாசனத் துறை அதிகாரி லட்சுமண் ராஜ்கோண்ட்வார் என்பவரது வீட்டில் குண்டுகள் வெடித்தன.
இதில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த நரேஷ் ராஜ்கோண்ட்வால், ஹிமன்சு வெங்கடேஷ் பான்சே ஆகியோர் இதில் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் 22 பேரை கைது செய்தனர். விசாரணையில், இந்துத்வா தீவிரவாத கட்டமைப்பு உருவாகி வருவது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றது. சிபிஐக்கு விசாரணை மாறியது.
ஆனால் சிபிஐக்கு மத்திய அரசிடமிருந்தோ, மாநில அரசிடமிருந்தோ விசாரணை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சிபிஐயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் கைதான 22 பேரும் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
அலட்சியப்படுத்திய அரசுகள் ..
மகாராஷ்டிர அரசும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இந்த வழக்கை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விட்டன.
ஆனால் மகாராஷ்டிர போலீஸார், சிபிஐ செய்ய வேண்டிய வேலையை செய்து இந்த கட்டமைப்பு குறித்த தகவல்களை வெளிக்கொணர்ந்து விட்டனர்.
போலி தாடி - மண்டை ஓடு!
குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் போலியான தாடிகளும் (ஒட்டுத் தாடி), முஸ்லீம்களின் மண்டை ஓடுகள் ஆகியவற்றை போலீஸார் கண்டுபிடித்தனர். குண்டுவெடிப்புக்கான பொருட்களும் சிக்கின.
இதையடுத்தே முஸ்லீம்கள் என்ற போர்வையில் இந்துத்வா தீவிரவாதிகள் குண்டுகளைத் தயாரித்தது தெரிய வந்தது.
புனே அருகே பயிற்சி ..
2003ம் ஆண்டு புனே அருகே உள்ள சிங்காத் என்ற இடத்தில் உள்ள ஆகாஷ் ரிசார்ட்டில் வைத்து இந்து தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 54 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங் தளத்தைச் ேசர்ந்த மும்பை மற்றும் புனே தலைவர்கள், இவர்களுக்கு நிதியுதவியும், ஆதரவும் அளித்து வந்துள்ளனர்.
இதுதொடர்பாக வி.எச்.பி. தலைவர் கோவிந்தா புரானிக் என்பவரின் பெயரும் அடிபட்டது.
கடந்த 2004ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் பார்பானி, ஜல்னா, பூர்னா ஆகிய இடங்களில் இந்த இந்து தீவிரவாதிகள், குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர்.
பிரவீன் தொகாடியா சந்தித்தார் ..
இந்துத்வா தீவிரவாதிகளை வி.எச்.பி. தலைவர் பிரவீன் தொகாடியா சந்தித்துப் பேசியுள்ளார் என்ற தகவலும் வெளியானது.
நான்டெட் சம்பவத்தில் கைதானவர்கள், தங்களுக்குப் பயிற்சி அளித்தவர் குறித்த பல தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
நீண்ட தாடியும், உயரமும், நல்ல உடல்வாகும் கொண்டவர்தான் தங்களுக்குப் பயிற்சி அளித்ததாகவும், அவரது பெயர் மிதுன் சக்கரவர்த்தி என்றும், குண்டுகளைத் தயாரிப்பது எப்படி என்று பயிற்சி அளித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். குண்டுகள் தயாரிக்கத் தேவையான பொருட்கள் அடங்கிய பையையும் அவர் கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.
புரோஹித்தான் மிதுன் சக்கரவர்த்தியா?
இவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது தற்போது கைதாகியுள்ள புரோஹித்தான், மிதுன் சக்கரவர்த்தியாக இருக்கக் கூடும் என மும்பை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்து தீவிரவாத கட்டமைப்பு நான்டெட்டிலிருந்து தொடங்கியதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்த கட்டமைப்பில் மேலும் பலர் இருக்கக் கூடும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
புரோஹித் காவல் நீட்டிப்பு..
இதற்கிடையே மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள லெப்டினென்ட் கர்னல் பிரசாத் புரோஹித்தின் சிறைக் காவல் நவம்பர் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மும்பை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வந்தார் புரோஹித். அவரது காவல் முடிந்ததைத் தொடர்ந்து நேற்று நாசிக் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவரை போலீஸார் ஆஜர்படுத்தினர்.
அவரது காவலை நவம்பர் 29ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி காந்தாரா உத்தரவிட்டார். புரோஹித் 11 நாள் போலீஸ் காவலில் முன்பு அனுப்பப்பட்டிருந்தார்.
புனே போலீஸாரிடம் ஒப்படைப்பு ..
மேலும், புனே தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் வசம் தற்போது புரோஹித் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
புனேவைச் சேர்ந்த அமித் டேட் என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கின் அடிப்படையில் புரோஹித்தை, புனே தீவிரவாதத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்க நாசிக் கோர்ட் உத்தரவிட்டது.
சமீர் குல்கர்னியும் ஒப்படைப்பு ..
இதேபோல இந்த வழக்கில் இன்னொரு குற்றவாளியான சமீர் குல்கர்னி, வேறு ஒரு வழக்குக்காக காத்கி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். புரோஹித் மூலமே அனைவரும் சிக்கினர்
இதற்கிடையே புரோஹித்திடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அனைத்து குற்றவாளிகளும் கைதாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
புரோஹித் மூலம் சிக்கிய குற்றவாளிகள் ..
நவம்பர் 5ம் தேதி மும்பை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார் புரோஹித். அவரிடம் மூளை வரைபடச் சோதனை, பாலிகிராப், நார்கோ அனாலிசிஸ் சோதனை உள்ளிட்ட பல வகையான சோதனைகள் மற்றும் விசாரணைகள் நடத்தப்பட்டன.
அவற்றின் மூலம் கிடைத்த தகவல்கள், புரோஹித் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே மற்றவர்கள் சிக்கினர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நன்றி தட்ஸ்தமிழ்
Monday, November 17, 2008
ராமர் கோவில் கோரி டிச.6ல் ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணி
திருத்துறைபூண்டி ஒன்றிய, நகர இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம் நகரத் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி கலந்து கொண்டார்.
பின்பு அவர் கூறியதாவது:
மகராஷ்டிரா மாநிலத்தில் வெடி குண்டு வழக்கில் பெண் சாமியார், ராணுவ அதிகாரி ஆகியோரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தான் கைது செய்துள்ளனர்.
இதற்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், கிறிஸ்துவ ஐக்கிய பேரவை போன்ற அமைப்புகள் இந்து முன்னணியை தடை செய்ய வேண்டும் என்று கோரி வருவது கண்டிக்கதக்கது.
டிசம்பர் 6 ம் தேதி முஸ்லீம் அமைப்புகள் பலவும் பல வித போராட்டங்களை அறிவித்துள்ளன. அதே தேதியில் இந்து முன்னணி சார்பில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு வெற்றி விழா கொண்டாடப்பட உள்ளது.
மேலும், அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்று கோரி மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக டிசம்பர் 6 ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடைபெறும் என்றார்.
நன்றி thatstamil
Tuesday, November 11, 2008
Monday, November 10, 2008
இந்து மதத் தீவிரவாதம் அம்பலம் .ஆயுதப் பயிற்சி பெற்ற 54 பேரைக் காவல்துறை தேடுகிறது
ஓபாமா ஆலோசகரின் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு-இந்திய அமைப்பு அதிருப்தி
சோனால் ஷாவின் குடும்பம் குஜராத்தைச் சேர்ந்ததாகும். இவரது குடும்பத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் நல்ல தொடர்புண்டு.
இந் நிலையில் அமெரிக்காவின் இனப்படுகொலைக்கு எதிரான இந்திய கூட்டமைப்பு, இந்திய-அமெரிக்க பல் சமூக கூட்டமைப்பு, மதச்சார்பற்ற மற்றும் ஒற்றுமைக்கான இந்திய அமைப்பு ஆகிய 3 அமைப்புகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓபாமாவின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள சோனால் ஷா, தீவிர ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் சிறுபான்மையினரான முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை ஊக்குவிக்கும், தூண்டி விடும் அமைப்பாகும்.
எனவே இந்த நியமனம் எங்களுக்கு அதிருப்தியை அளிக்கிறது. இதுகுறித்து பிற இந்திய அமெரிக்க அமைப்புகளுடன் நாங்கள் ஆலோசனை நடத்தவுள்ளோம்.
தனக்கு வி.எச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுடன் உள்ள தொடர்புகள் குறித்து சோனால் ஷா தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
அமெரிக்க அதிகார வட்டத்திற்குள் இந்துத்வா சக்திகள் ஊடுறுவ முயற்சிப்பது குறித்து அமெரிக்க அரசியல்வாதிகளிடமும், பொருளாதார நிபுணர்களிடமும் எடுத்துக் கூறவுள்ளோம். இதற்கான பிரசாரத்திலும் நாங்கள் ஈடுபடவுள்ளோம்.
தீவிரவாத, மதவாத போக்குடைய அமைப்புகளுடன் தொடர்புடைய இந்தியர்கள் அமெரிக்க அதிகார வட்டத்திற்குள் வந்து விடாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு சக இந்திய - அமெரிக்க அமைப்புகளை கேட்டுக் கொள்கிறோம்.
சோனால் ஷாவை நியமித்தது ஓபாமாவின் தவறல்ல. மாறாக நாம் சரியான முறையில் விழிப்புணர்வுடன் இல்லாததே அதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப் படுகொலைக்கு எதிரான இந்தியக் கூட்டமைப்பு கொடுத்த எதிர்ப்புக் குரலைத் தொடர்ந்துதான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு கடந்த 2005ம் ஆண்டு விசா வழங்க மறுத்தது என்பது நினைவிருக்கலாம்.
புஷ் நிர்வாகத்திடமிருந்து ஓபாமாவிடம் நிர்வாகப் பொறுப்புகளை மாற்றுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவில், சோனால் சிங்கும் இடம் பெற்றுள்ளார் என்பது குறி்ப்பிடத்தக்கது.
நன்றி -http://thatstamil.oneindia.in/news/2008/11/11/world-obamas-rss-link-aide-criticised.html
Sunday, November 9, 2008
காஞ்சிபுரம்:ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரின் கருத்தரங்கு
காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் உள்ளது பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி. இங்கு 3,500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று விடுமுறை என்பதால் 9 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் தனி வகுப்பு நடந்தது. பள்ளியின் மற்றொரு பகுதியில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் 2 நாள் கருத்தரங்கம் நடந்துள்ளது. இந்த கருத்தரங்குக்கு பல ஊர்களில் இருந்து ஏராளமான ஆர்எஸ்எஸ் உறுப்பனர்கள் வந்திருந்தனர். வாகனங்களில் தடி, உருட்டுக் கட்டைகளையும் அவர்கள் எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கேள்விப்பட்ட கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தமுமுக ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் கொடிகளுடன் பலர் பள்ளி முன் திரண்டனர். மதவாதம், வன்முறையைத் தூண்டும் வகையில் ஆர்எஸ்எஸ் நடத்தும் கருத்தரங்குக்கு, பொது இடமான பள்ளியில் எப்படி இடம் தரவலாம் என்று என்று பள்ளி நிர்வாகி அருண்குமாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது, சில ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் வெளியில் வந்து கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கம்யூனிஸ்ட் மற்றும் இதர கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர் கற்களை எறிந்துள்ளனர்.
ஆர்எஸ்எஸ் வன்முறை
உடனே பள்ளிக்குள் இருந்து தடிகள் மற்றும் உருட்டுக் கட்டைகளுடன் காக்கி அரைக்கால் சட்டையுடன் திமுதிமுவென ஓடிவந்தனர் ஆர்எஸ்எஸ்காரர்கள். வெளியில் நின்றிருந்த அனைத்துக் கட்சிகளின் இளைஞர்கள், முதியோர் என எல்லாரையும் வெறியோடு தாக்கினர். இதனால் கூட்டத்தினர் சிதறி ஓடினர். டியவர்கள் மீது கற்களையும் வீசித் தாக்கினர் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்.
இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் முத்துக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கமலநாதன், விடுதலைச் சிறுத்தைகள் டேவிட், நாராயணன், தமுமுக பாஷா, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜா, ராகவன் ஆகிய 6 பேர் காயமடைந்தனர். அனைவரும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தக் கலவரத்தைப் பார்த்து பள்ளியில் இருந்த மாணவ, மாணவியர் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் நகரில் பரவி, பெற்றோர் பதற்றத்துடன் வந்து பிள்ளைகளை அழைத்து சென்றனர்.
காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கள் சமுத்திரக்கனி, முனியப்பன், இன்ஸ்பெக்டர்கள் பாலு, சிவபாதசேகரன், பஞ்சாட்சரம் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிந்தனர். போக்குவரத்து நிறுத்தப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளி நிர்வாகி அருண்குமாரை அழைத்த போலீஸ் அதிகாரிகள், ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரை உடனே வெளியேற்றும்படி கூறினர். கோட்டாட்சியர் முருகையா (பொறுப்பு), தாசில்தார் நடராஜன் ஆகியோர் வந்து பார்வையிட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி நாராயணசாமி கூறுகையில், 'அமைதியான நகரம் காஞ்சிபுரம். இங்கு ஆர்எஸ்எஸ் காலூன்றி மதநல்லிணக்கத்தையும், அமைதியையும் கெடுக்கப்பார்க்கிறது. அதைத் தடுக்கவே நாங்கள் முயன்றோம். ஆனால் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே எங்கள் கட்சிக்காரர்களை ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் தாக்கினர். கமலநாதனை இழுத்து ரோட்டில் போட்டு தடியால் தாக்கினர். பாஷா தடுத்தார். அவர் முகத்தில் குத்தினர். அவருக்கு 4 பல் உடைந்தது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தைக் கண்டித்தும், இந்த வன்முறைக் கும்பலை காஞ்சிபுரத்திலிருந்து வெளியேற்றக் கோரியும் 10-ம் தேதி காஞ்சிபுரத்தில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்' என்றார்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் திட்டமிட்ட வன்முறைப் பயிற்சியை தடுத்து நிறுத்தக் கோரியும், நேற்றைய வன்முறையைக் கண்டித்தும் அம்பேத்கர் சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் இதற்கு தலைமை வகித்தார்.
Thursday, November 6, 2008
Tuesday, November 4, 2008
இதே குற்றத்திற்காக ஒரு முஸ்லிம் பிடிபட்டிருந்தால்
....தக்க நேரத்தில் நாடு பிழைத்தது!
இதே குற்றத்திற்காக ஒரு முஸ்லிம் பிடிபட்டிருந்தால்.... கொஞ்சமும் வெட்கமின்றி நடுநிலை(!) நாளிதழ்களும் அவற்றைப் பிரசுரிக்கும்.
அவ'னை' முகத்தை மூடி,பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டி,ஆணி, சுத்தியல், டார்ச் பேட்டரி போன்ற 'பயங்கர ஆயுதங்கள்' நிரப்பப்பட்ட ஒரு டேபிளின் முன் அவ'னை' நிறுத்தி வைத்து ஃபோட்டோ எடுத்து,அல்-காயிதா முதல் லஷ்கரே தய்யிபா வரை தொடர்புடையவ'ன்' என்றும், இந்தியத் தலைவர்களைக் கொல்வதற்குக் காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் பயிற்சி எடுத்து வந்தவ'ன்' என்றும் தக்க நேரத்தில் எடுக்கப் பட்ட காவல் துறையின் நடவடிக்கையால் நாட்டின் தலைவர்கள் காப்பாற்றப் பட்டனர் என்றும் பத்திரிகையாளர்களுக்கு அறிக்கை கொடுப்பார்கள்.
நல்ல குடும்பத்து நல்ல பிள்ளைகள்!காதலிச்ச பொண்ணு திரும்பிப் பார்க்கவில்லை. பாவம், மனசு நொந்து போயி இந்த மாதிரி ஒரு காரியம் செய்து விட்டார். மற்றபடி இவர் ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த நல்ல பிள்ளை"இது ஒரு திரைப் படத்தின் வசனக் காட்சியல்ல. இங்குத் தரப் பட்டுள்ள.
'கைது-விடுதலை:3'இன் க்ளைமாக்ஸ் வசனம்தான் அது.கைது-விடுதலை : 1சில மாதங்களுக்கு முன்னர், ஜனாதிபதியைக் கொல்லத் தபால் குண்டு அனுப்பியதாக, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த முஹ்ஸின் என்ற முஸ்லிம் இளைஞரைப் பிடித்துக் கொண்டுபோய் 20 நாட்களுக்கும் மேலாகக் கஸ்டடியிலும் சிறையிலும் வைத்துக் கேரளக் காவல்துறையினர் கொடுமைப் படுத்தினர். நிரபராதியான அவரின் தாயையும் தந்தையையும் உறவினர்களையும் காவல்துறை கொடூரமாக வேட்டையாடியது.
ஆனால், தீவிர விசாரணையின் பின்னர் உண்மையான குற்றவாளியான ராகேஷ் சர்மா என்பவரைக் காவல்துறை கைது செய்தது. அப்போது பத்திரிக்கையாளர் கூட்டத்தைக் கேரளக் காவல்துறை கூட்டி, "பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற ராகேஷ் சர்மா, மனநிலை பாதிக்கப் பட்டதாலேயே அவ்வாறு அனுப்பினார்" என காவல்துறை 'விளக்கம்' கூறி நற்சான்று வழங்கியது.கைது-விடுதலை : 2அதேபோன்று, சில மாதங்களுக்கு முன்பு, இதேபோல ஒரு மிரட்டல் விடுத்த பாஜகவின் மாணவர் அணி (ஏ.பி.வி.பி) உறுப்பினரான கோழிக்கோட்டைச் சேர்ந்த தேஜஸ் என்பவரது வழக்கையும் காவல்துறை மிகச் 'சாமர்த்தியமாக'க் கையாண்டு தேஜஸை நிரபராதி என விடுவித்தது.
கைது-விடுதலை : 3கரூரில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரியும் ஊழியரின் மகனான அருண் சூர்யா என்பவரை, ஜனாதிபதி, இந்திய உளவுத்துறை 'ரா'வின் தலைவர், ஐ.பி அதிகாரிகள் ஆகியோருக்கு மிரட்டல் மின்மடல் அனுப்பியதற்காக காவல்துறை சென்ற வாரம் கைது செய்திருந்தது.தகவலறிந்து மாநகரக் காவல்துறை ஆணையரது அலுவலகத்துக்கு அருண் சூர்யாவின் பெற்றோர் வந்தனர். அவர்கள் காவல்துறை உயரதிகாரிகளுடன் பல மணி நேரம் 'ஆலோசனை' நடத்தினர். அதனைத் தொடர்ந்தே, பத்திரிகையாளர் கூட்டத்துக்குக் காவல்துறை ஏற்பாடு செய்து, கண்ணன் என்ற அருண் சூர்யாவின் கள்ளம் கபடமில்லாத குணத்தைப் பற்றி இந்தச் செய்தியின் முதற் சொற்றொடரில் நீங்கள் படித்தவாறு விவரித்தது."நவம்பர் 14 க்குள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியைக் கொலை செய்வோம்" என்றும் "மேலும் பல தலைவர்களைக் கொலை செய்யும் திட்டம் உண்டு" எனவும் "ஜனாதிபதி உட்பட அனைத்துத் தலைவர்களுக்கும் எச்சரிக்கை!" எனவும் மின் மடல் மூலம் கொலை மிரட்டல் விடுத்திருந்தார் அருண் சூர்யா.
கடந்த அக்டோபர் 24 மாலை 5.15க்கு ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் மின்மடலில், "கொச்சி மற்றும் சென்னையில் 4 வெடிகுண்டுகள் வீதம் வைக்கப் பட்டுள்ளன" எனவும் "விரைவில் அவை வெடிக்கும்" எனவும் அவரது மின்மடலில் மிரட்டல் விடுக்கப் பட்டிருந்தது.இதற்கு முன்னரும் இதே போன்ற பல மிரட்டல் மின்மடல்கள் வந்திருப்பினும் இம்முறை சற்றுத் தீவிரமான மிரட்டலுடன் சென்னை மற்றும் கொச்சியில் வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளதாக வந்ததால், ஜனாதிபதி மாளிகை உடனடியாக மிரட்டல் மடல் விவரத்தை ஐ.பி, கேரள, தமிழக உள்துறைச் செயலர்களுக்கு அனுப்பி இருந்தது.
இம்மிரட்டல் மின்மடலை அனுப்பி, பிடிபட்டிருந்த அருண் சூர்யாவை, "எந்த விதமான தீவிரவாத குழுக்களுடனோ அமைப்புகளுடனோ தொடர்புடையவர் அல்ல எனவும் விளையாட்டிற்காகத்தான் அவ்வாறு ஒரு மின்மடல் அனுப்பியதாகவும்" கேரளக் காவல்துறை ஜனாதிபதி மாளிகைக்குக் கொடுத்த தகவலில் கூறியுள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அனுப்பப்பட்ட மின்மடலில் தெரிவிக்கப் பட்டிருந்த மிரட்டலைக் கண்டு பயப்பட ஏதும் இல்லை எனவும் கேரள காவல்துறை உறுதி கூறியுள்ளது.காதல் தோல்வியினால் விரக்தியடைந்த அருண் சூர்யா, காதலியின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக 'ரஹ்மத்துல்லாஹ் பரகத்' என்ற முஸ்லிம் பெயரில் மெயில் அக்கவுண்ட் திறந்ததேன்?முஸ்லிம்கள் மட்டுமே பயன் படுத்தும் அரபுமொழிச் சொற்கள் சிலவற்றை மிரட்டல் மின்மடலின் இறுதியில் இணைத்ததேன்?தீவிரவாத மிரட்டல் விடுத்த அருண் சூர்யாவை, "நல்லப் பிள்ளை; நல்லக் குடும்பத்துப் பிள்ளை; மனவேதனையில் அப்படி செய்து விட்டான்; அல்லாமல் இதன் பின்னணியில் வேறு எந்த நோக்கமும் இல்லை"
என நற்சான்றிதழ் வழங்கும் காவல்துறையிடம் இதற்கான பதில்கள் இல்லை!இதே குற்றத்திற்காக ஒரு முஸ்லிம் பிடிபட்டிருந்தால்:அவ'னை' முகத்தை மூடி,பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டி,ஆணி, சுத்தியல், டார்ச் பேட்டரி போன்ற 'பயங்கர ஆயுதங்கள்' நிரப்பப்பட்ட ஒரு டேபிளின் முன் அவ'னை' நிறுத்தி வைத்து ஃபோட்டோ எடுத்து,அல்-காயிதா முதல் லஷ்கரே தய்யிபா வரை தொடர்புடையவ'ன்' என்றும், இந்தியத் தலைவர்களைக் கொல்வதற்குக் காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் பயிற்சி எடுத்து வந்தவ'ன்' என்றும்தக்க நேரத்தில் எடுக்கப் பட்ட காவல் துறையின் நடவடிக்கையால் நாட்டின் தலைவர்கள் காப்பாற்றப் பட்டனர் என்றும் பத்திரிகையாளர்களுக்கு அறிக்கை கொடுப்பார்கள்.கொஞ்சமும் வெட்கமின்றி நடுநிலை(!) நாளிதழ்களும் அவற்றைப் பிரசுரிக்கும்.நல்லவேளை, பிடிபட்டவர் நல்ல குடும்பத்து நல்ல பிள்ளையாக இருந்ததால் நாடு பிழைத்தது!நல்ல குடும்பத்து நல்ல பிள்ளைகள்!.
Sunday, November 2, 2008
குஜராத் : அசாருதீன் பிழைத்துவிட்டான் : நீதி செத்துவிட்டது
சற்றே நொண்டி நடக்கும் கால்கள்; கொக்கி போல் வளைந்த ஒரு கை; ஆனால், தீர்க்கமான மன உறுதி; அவ்வப்போது முகத்தில் அரும்பும் புன்னகை – இதுதான் அசாருதீன் என்கிற சிறுவனின் அடையாளம். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர போலீசார் நடத்திய இந்து மதவெறித் தாக்குதலின் இரத்த சாட்சியாய் வாழ்ந்து வருபவன்தான் இந்தச் சிறுவன்.
ஆறு வருடங்களுக்கு முன்பு, கோத்ரா இரயில் தீப்பிடித்த சம்பவத்தைச் சாக்காக வைத்து குஜராத் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் இந்துவெறிப் பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். இலட்சக்கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் வீடுகளை இழந்து அகதி முகாம்களுக்குத் துரத்தப்பட்டனர். முஸ்லிம் பெண்களின் வயிற்றைத் திரிசூலங்களால் குத்தி உள்ளே இருந்த சிசுக்களையும் இந்துபயங்கரவாதிகள் சிதைத்தார்கள். இந்த நரவேட்டைகள் நின்ற பின்னர், இரண்டு மாதங்கள் கழித்து, திடீரென ஒருநாள் இரண்டு விசுவ இந்து பரிசத் தொண்டர்களின் பிணங்கள், அகமதாபாத் நகரத்தின் புறநகர்ப் பகுதியான ரமோல் என்னும் கிராமத்திற்கு அருகில் நெடுஞ்சாலையில் கிடந்தன.
இந்துவெறியர்களுக்கு பாடம் கற்பிக்கவே அவ்விருவரும் முஸ்லீம்களால் கொல்லப்பட்டனர் எனக் கருதிய ஒரு கும்பல், அப்பகுதியில் இருந்த முஸ்லிம்களை அழித்தொழிக்கக் கிளம்பியது. அவர்கள் வேறுயாரும் அல்ல. இந்து மதவெறிஊட்டப்பட்ட குஜராத் மாநிலப் போலீசார்தான். பிணங்கள் கிடந்த இடத்திற்கு அருகில் உழைக்கும் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வாழ்ந்துவரும் முகம்மது நகர் எனும் சேரிப் பகுதியில் போலீஸ் பட்டாளம் புகுந்தது. எந்தவொரு விசாரணையும் இன்றி, அங்கிருந்தவர்களின் மேல் போலீசுப்படை கண்மூடித்தனமாக சுடத் தொடங்கியது. தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயதுச் சிறுவனான அசாருதீனின் நெற்றியில் குண்டு பாய்ந்து, கழுத்து வழியாக வெளியேறியது. இரத்தம் பீறிடக் கூக்குரலிட்டவாறே அசாருதீன் கீழே சரிந்தான்.
துப்பாக்கிச் சத்தத்தையும், அதைத் தொடர்ந்து சிறுவனின் அலறலையும் கேட்டு சமையலறையிலிருந்து ஓடிவந்த அவனது தாய் சகிலா பானுவோ, நெஞ்சில் குண்டு பாய்ந்து இரத்த வெள்ளத்தில் சரிந்தார். குடியிருப்பெங்கும் போலீசார் வெறித்தனமாக மக்களைப் பார்த்து சுட்டுக்கொண்டே இருந்தனர். ஆண்கள் அனைவரும் வேலைக்குச் சென்றுவிட, வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் மட்டுமே இருந்த அந்தப் பகல் வேளையில் எதிரி நாட்டுக்குள் படையெடுத்த இராணுவத்தைப் போல கொஞ்சமும் ஈவிரக்கமின்றி அவர்கள் தாக்கினார்கள். வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த சுலைகா என்ற வயதான பாட்டி சுட்டுக் கொல்லப்பட்டார். பல பெண்களுக்கு கைகளிலும், கால்களிலும் குண்டடிகள் பட்டன.
முகம்மது ரபீக் எனும் இரயில்வே தொழிலாளி ஒருவர் அந்நேரம் பார்த்து தனது சைக்கிளில் வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி வளைத்துத் தாக்கிய போலீசாரிடம், தான் ஒரு அரசு ஊழியர் என்று கூறித் தனது அடையாள அட்டையைக் காண்பித்தும் பலனில்லாமல், கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்தக் குடியிருப்பிலிருந்தவர்கள் எல்லோரும் ஓடி ஒளிந்த பிறகுதான், போலீசின் அந்தக் கொலைவெறித் தாக்குதல் நின்றது. போலீசைத் தொடர்ந்து வந்த துணை இராணுவத்தினர், போலீஸ் நடத்திவிட்டுச் சென்ற தாக்குதலால் அதிர்ச்சியுற்றவர்களாக, அடிபட்டுக் கிடந்த மக்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்கள்தான் அசாருதீனின் தாயாரை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றினர். ஆனால் அவர்களே, அசாருதீன் இறந்துவிட்டதாகக் கருதி அப்படியே போட்டுவிட்டனர்.
அலுமினிய வார்ப்படத் தொழிலாளியான அசாருதீனின் தந்தை ஷேக் இமாமுதீன் தனது குடியிருப்பில் நடந்த போலீஸ் தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு ஓடி வந்தார். தனது மகன் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு துடித்தார். பின்னர் அங்கு வந்த போலீசு உயரதிகாரிகள் மூலம் ஒரு ஆம்புலன்சைக் கெஞ்சிப் பெற்றுக் கொண்டு தனது மகனை அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அங்கு அசாருதீனைப் பரிசோதித்த மருத்துவர்களோ, அவன் இறந்து விட்டதாகக் கூறிவிட்டனர். இதனால் பிணவறைக்குப் பக்கத்தில் கிடத்தப் பட்டிருந்த தனது மகனின் உடலுக்கருகில் செய்வதறியாது அழுது கொண்டிருந்தார் இமாமுதீன். திடீரென அசாருதீனின் உடலில் அசைவு தென்பட்டது. உடனே மருத்துவர்களிடம் ஓடி, தனது மகனுக்கு சிகிச்சை தரக் கோரினார். மகனை இழந்த துக்கத்தில் பிதற்றுவதாகக் கருதி அக்கோரிக்கையை மருத்துவர்கள் உதாசீனப்படுத்தினர். இமாமுதீன் அவர்களது காலில் விழுந்து கெஞ்சி தனது மகனைக் காப்பாற்றுமாறு கதறி அழுதார்.
இரக்கப்பட்ட மூன்று மருத்துவர்கள் அசாருதீன் உயிருடனிருப்பதை அறிந்து, அவனுக்கு உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினர். மதத்தால் இந்துக்களான அவர்கள், மிகுந்த போராட்டத்திற்கிடையே அசாருதீனின் உயிரைக் காப்பாற்றினர். அவனது தாயும் மற்றொரு மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டு, பல மாதங்களுக்குப் பிறகு, இருவரும் வீடு திரும்பினார்கள்.
அசாருதீன் உயிர் பிழைத்த போதிலும், அவனால் பல ஆண்டுகள் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவோ, தானே உணவருந்தவோ கழிவறைக்குச் செல்லவோ முடியாது. தீராத தலைவலியும், கண்பார்வைக் குறைவும், ஞாபக மறதியும் அச்சிறுவனை வாட்டின. மருந்துமாத்திரைகள், சிறப்பான சத்துணவுகள், சிகிச்சைக்கான செலவுகள் பெரும் சுமையாகி அவனது பெற்றோரை வதைத்தன. மகன் மீது கொண்டிருந்த எல்லையற்ற பாசத்தால், இமாமுதீன் தனது ஆலையில் "ஓவர்டைம்'' வேலை செய்தும், ஓய்வின்றி இதர சில்லறை வேலைகளைச் செய்தும் இச்செலவுகளை ஈடேற்றினார். தங்களது உணவுச் செலவுகளை பெரிதும் குறைத்துக் கொண்டு, அசாரின் பெற்றோர்கள் கடுமையாக உழைத்து அவனுக்குச் சிகிச்சை அளித்தனர். சிகிச்சையின் பலனாகவும், பெற்றோரின் பாச அரவணைப்பாலும் அசார் மெதுவாக எழுந்து நின்று நடக்கத் தொடங்கினான்.
படிப்பறிவில்லாத கூலித் தொழிலாளியான இமாம், தனது மகனை சிறப்பாகப் படிக்க வைக்க வேண்டுமென்று பெரிதும் விரும்பினார். குண்டடிபட்டு அதிசயமாக உயிர் பிழைத்து, ஐந்தாண்டுகளாக நடைபிணமாகக் கிடந்து, இன்று மெதுவாக நடக்கத் தொடங்கியுள்ள அசாரை கைத்தாங்கலாக அருகிலுள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்று, பள்ளி நிர்வாகிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி ஆறாம் வகுப்பில் சேர்த்துள்ளார். அசாருக்கு தற்போது 17 வயது. பாடங்களை நினைவில் வைத்துக் கொள்வதில் அவன் மிகவும் சிரமப்படுகிறான். நடக்கும்போது சில நேரங்களில் தடுமாறி விழுந்து விடுகிறான். இருப்பினும், அவன் மற்ற சிறுவர்களோடு பள்ளிக்குச் செல்வதைக் காணும் போது அசாரின் பெற்றோர்களது துயரமும் வேதனையும் மறைந்து, ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
தனது மகனையும், மனைவியையும் காரணம் ஏதுமின்றிச் சுட்ட போலீசாரின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் இமாம். ஆறு வருடங்கள் ஆகியும் இன்னும் அந்த வழக்கு விசாரணைக்கே வரவில்லை. ஆனால், போலீஸ் தரப்பில் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அசாருதீனும் அவனது தாயாரும், இன்னும் கொல்லப்பட்ட, காயமடைந்த எல்லோரும் கூட்டமாக அருகிலிருந்த இந்துக் கோவில் ஒன்றைக் குண்டுவீசித் தகர்க்க வந்ததாகவும், அதனால்தான் அவர்களைச் சுட்டதாகவும் குற்றஞ்சுமத்துகிறது, அவ்வழக்கு.
தனது மகன் சுடப்பட்டபோது, அவனுக்கு இந்து, முஸ்லீம் என்றால் என்னவென்று கூடத் தெரியாது எனக் கூறும் இமாமிற்கு, அவனைச் சுட்ட போலீசார் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகுந்த வேதனையைத் தருகிறது.
குஜராத் மண்ணில் முஸ்லிம் மதத்தில் பிறந்துவிட்ட ஒரே காரணத்துக்காக வதைபடும் இலட்சக்கணக்கானவர்களின் துயரத்தில் ஒருதுளிதான், அசாருதீனின் அவலம்.
அசாருதீனைப் பெற்ற இமாமுதீன் குடும்பத்தைப் போலவே, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட முகம்மது நகர் சேரிப்பகுதியில் பாதிக்கப்பட்ட ஏழை முஸ்லிம் குடும்பங்கள் ஏராளம். முகம்மது நகரில் கைது செய்யப்பட்ட 9 அப்பாவி முஸ்லிம்கள், ஐந்தாண்டுகளுக்கு எவ்வித விசாரணையுமின்றிச் சிறையில் வதைபட்டனர். போலீசு தனது குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் எதையும் காட்டாததால், ஓராண்டுக்கு முன்பு நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது. ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, பொய்க்குற்றம் சாட்டி சிறையிலடைத்த கொடுஞ்செயலுக்காக எந்தவொரு போலீசுக்காரனும் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை.
இதோ, அசாருதீன் தனது வேதனைகளை மறைத்துக் கொண்டு புன்முறுவல் பூக்கிறான். அவனுக்கு நேர்ந்துள்ள துயரத்துக்கும் வேதனைக்கும் காரணம் யார் என்பதை உணர்ந்து போராடுவதுதான், அசாருதீன் மீது நாம் காட்டும் பரிவுக்கு உண்மையான பொருளாக இருக்க முடியும்.
("தி ஹிந்து'' நாளேட்டில் (செப்.7,2008)
ஹர்ஷ் மந்தர் எழுதியுள்ள "அசாரின் கதை''யின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்).