சமுதாயமே ஒன்றுபடு... முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் பாசிச பயங்கரவாத கும்பல்களை அடியாளம்காட்டி முஸ்லிம்கலிடையே உள்ள பிரிவினையை களைந்து சகோதாரர்களை ஒருங்கிணைப்பதே இத்தளத்தின் முக்கிய நோக்கம் இன்சாஅல்லாஹ்.. /
மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிந்தவனாவான். மேலும் அல்லாஹ் (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன். மேலும், அல்லாஹ் உதவியாளனாக இருக்கப் போதுமானவன்.
(அத்தியாயம் : அந்நிஸா - பெண்கள், வசனம்: 45)

Monday, November 17, 2008

ராமர் கோவில் கோரி டிச.6ல் ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணி

திருத்துறைப்பூண்டி: தமிழகம் முழுவதும் வரும் டிசம்பர் மாதம் 6-ம் தேதி ராமர்கோயில் கட்டக் கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதன் மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி தெரிவித்தார்.

திருத்துறைபூண்டி ஒன்றிய, நகர இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம் நகரத் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி கலந்து கொண்டார்.

பின்பு அவர் கூறியதாவது:

மகராஷ்டிரா மாநிலத்தில் வெடி குண்டு வழக்கில் பெண் சாமியார், ராணுவ அதிகாரி ஆகியோரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தான் கைது செய்துள்ளனர்.

இதற்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், கிறிஸ்துவ ஐக்கிய பேரவை போன்ற அமைப்புகள் இந்து முன்னணியை தடை செய்ய வேண்டும் என்று கோரி வருவது கண்டிக்கதக்கது.

டிசம்பர் 6 ம் தேதி முஸ்லீம் அமைப்புகள் பலவும் பல வித போராட்டங்களை அறிவித்துள்ளன. அதே தேதியில் இந்து முன்னணி சார்பில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு வெற்றி விழா கொண்டாடப்பட உள்ளது.

மேலும், அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்று கோரி மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக டிசம்பர் 6 ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடைபெறும் என்றார்.
நன்றி thatstamil

No comments: