சமுதாயமே ஒன்றுபடு... முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் பாசிச பயங்கரவாத கும்பல்களை அடியாளம்காட்டி முஸ்லிம்கலிடையே உள்ள பிரிவினையை களைந்து சகோதாரர்களை ஒருங்கிணைப்பதே இத்தளத்தின் முக்கிய நோக்கம் இன்சாஅல்லாஹ்.. /
மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிந்தவனாவான். மேலும் அல்லாஹ் (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன். மேலும், அல்லாஹ் உதவியாளனாக இருக்கப் போதுமானவன்.
(அத்தியாயம் : அந்நிஸா - பெண்கள், வசனம்: 45)

Sunday, November 2, 2008

முத்துப்பேட்டை : முஸ்லிம் பெண்களை வெட்ட வந்த சங்பரிவார்

முத்துப்பேட்டையில் செல்போன் நீசார்ஜ் கடை வைத்திருப்பவர் நஜிமுதீன். இவரது கடையில் ரீசார்ஜ் செய்ய வந்த சங்கர் என்பவருக்கும் இவருக்கும் பிரச்சனை ஏற்பட கைகலப்பு ஏற்படு கிறது அப்போது அந்த வழியாக வந்த பி.ஜே.பி. நகர செயலாளர் மாரிமுத்து சங்கருக்கு ஆதரவாக பிரச்சனையில் ஈடுபடுகிறார். இதையடுத்து தாக்கப்பட்ட நஜிமுதீன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்கிறார். ஆனால் 50க்கும் மேற்பட்ட சங்பரிவார கும்பல் காவல் நிலையத்தில் தயாராக நிற்கிறது. விஷயமறிந்து தமுமுக திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் தீன் முஹம்மது காவல் நிலையத்திற்கு சென்றார். புகார் கொடுக்க வந்தவரை தாக்க முனைந்த சங்பரிவார் கும்பலிடம் இருந்து நஜீமுதீனை அழைத்து வருகிறார்.
ஆனால் சங்பரிவார கும்பல் வெறி அடங்காமல் ஸ்டேஷன் வெளியே நிறுத்தி வைத்திருந்த முஸ்லிம்களுக்கு சொந்தமாக ஒரு ஆட்டோவை கொளுத்துகின்றனர். போலீஸும் வேடிக்கை பார்க்கிறது. அதேபோல் தம்பிக்கோட்டை என்னுமிடத்தில் பேருந்தில் வந்த முஸ்லிம் பெண்களை ஒரு கும்பல் வெட்டுவதற்காக பாய்கிறது. அப்போது தடுக்க முனைகிறார் இப்ராஹீம். அதனால் அவரை வெட்டி விட்டு கும்பல் தப்பி ஒடிவிடுகிறது.
சம்பவங்களை கேள்விப்பட்ட முத்துப்பேட்டை முஸ்லிம் இளைஞர்கள் ஒன்று திரள, கலவர அபாயம் ஏற்படு கிறது. பஜாரில் சில கடைகள் தாக்கப்படுகின்றன. உடனடியாக அதிரடிப் படை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப் படுகிறது.
இந்நிலையில் முத்துப்பேட்டை நகர தமுமுக செயலாளர் ஹலீம், இப்ராஹீமை வெட்டிய ரவுடிக்கும்பல் மீது வழக்கு பதிவு செய்த எண்ப்ங் நகல் வாங்குவதற்காக முத்துப்பேட்டை காவல் நிலையம் செல்கிறார். ஆனால் சங்பரிவார சிந்தனை கொண்டதாக மாறிவிட்ட முத்துப்பேட்டை காவல்துறை, ஹலீமைக் கைது செய்கிறது. நகர துணை செயலாளர் ரவூப்பையும் வீடு புகுந்து கைது செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல் பெருநாள் விடுமுறைக் காக வீட்டுக்கு வந்த சென்னை சதக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் தாஜிம் என்பவரை யும் கைது செய்துள்ளனர். கலவரத்தை தொடங்கி வைத்து குளிர் காய்ந்து கொண்டிருக்கும் சங்பரிவாரக் கும்பலை விட்டுவிட்டு அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து வரும் காவல்துறையின் போக்கு முத்துப்பேட்டை மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.

மேலும் படிக்க http://nermai.blogspot.com/2007/10/blog-post_17.html

நன்றி மு மு

No comments: